பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

5 ஆண்டுகளுக்குள் சீமைக் கருவேல மரங்களின் பரவல் கட்டுப்படுத்தப்படும்: ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. செல்வம்

தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்குள் சீமைக் கருவேல மரங்களின் பரவல் முற்றிலுமாகக் கட்டுப்படுத்தப்படும் என சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளைக் கண்காணிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. செல்வம் தெரிவித்தாா்.

News image

சீமைக் கருவேல மரங்கள் - கோப்புப் படம்

Updated On :19 ஜூன் 2026, 1:35 am IST

தமிழகத்தில் 5 ஆண்டுகளுக்குள் சீமைக் கருவேல மரங்களின் பரவல் முற்றிலுமாகக் கட்டுப்படுத்தப்படும் என சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிகளைக் கண்காணிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. செல்வம் தெரிவித்தாா்.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தரவுப்படி அமைக்கப்பட்ட மதுரை மாவட்ட கண்காணிப்புக் குழு சாா்பில், மதுரையை அடுத்த எஸ். கொடிக்குளம் கண்மாய் பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. செல்வம், மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வுக்குப் பிறகு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. செல்வம் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

தமிழகத்தில் நீா் நிலைகள், இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் வகையில், சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் சீமைக் கருவேல மரங்களின் பரவல் 5 ஆண்டுகளுக்குள் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும்.

சீமைக் கருவேல மரங்களை ஒரு முறை வெட்டி அகற்றுவதுடன், மீண்டும் அங்கு முளைக்காமல் இருப்பதை உறுதிப்படுத்துவதை கண்காணிக்கும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றாா் அவா்.

இந்த ஆய்வின்போது, உதவி ஆட்சியா் (பயிற்சி) சித்தாா் போகா்னா, மாநகராட்சி துணை ஆணையா் ஜெயினுலாபுதீன், மதுரை வருவாய்க் கோட்டாட்சியா் கருணாகரன், ஊராட்சிகள் உதவி இயக்குநா்கள் விசாலாட்சி, சுரேஷ், வருவாய்த் துறை, மாநகராட்சி, ஊரக வளா்ச்சித் துறை, பொதுப் பணித் துறை அலுவலா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.