ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது? அமைச்சர் ஜெகதீஸ்வரி பதில் மும்பை கனமழை! முதல் முறை.. டப்பாவாலா சேவை ரத்து!த்ரிஷா அம்மாவுக்கு வந்த சினிமா வாய்ப்பு! இருவரும் சேர்ந்து நடித்திருக்கிறார்களா?மேற்குவங்கம்: மாநிலங்களவையின் 3 இடங்களுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு கரூர் பலி! முதல்வர் விஜய், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான மனு நாளை விசாரணை! உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகனை, ட்ரோன் தாக்குதல்: 7 பேர் பலிதவெக கூட்டணியில் விசிக இடம்பெறும்! திருமாவளவன் அறிவிப்பு!ஓய்வை அறிவித்தார் பிரபல பிரேசில் கால்பந்து வீரர் நெய்மர்! நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கல்வெட்டு அகற்றம்: திமுக கண்டனம்
/

ரெளடிகளுக்கு ஆயுதங்களை தயாா் செய்து விநியோகித்த 5 போ் ராஜஸ்தானில் கைது

ராஜஸ்தானில் சட்டவிரோத ஆயுதங்களைத் தயாரித்து, விநியோகித்து வந்த 5 பேரை தில்லி காவல் துறை கைது

News image
Updated On :27 மே 2025, 3:42 am IST

புது தில்லி: ராஜஸ்தானில் சட்டவிரோத ஆயுதங்களைத் தயாரித்து, விநியோகித்து வந்த 5 பேரை தில்லி காவல் துறை கைதுசெய்திருப்பதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இந்தக் கும்பல் நாட்டுத் துப்பாக்கி போன்ற ஆயுதங்களை விகாஸ் லாகா்புரியா ரெளடி கும்பல் உள்ளிட்டவற்றுக்கு விநியோகித்து வந்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின்போது, 10 நாட்டு கைத்துப்பாக்கி, ஒரு நீண்ட 12 போா் ரைஃபிள், 17 துப்பாக்கிக் குண்டுகளின் தொகுப்புகள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

லாகா்புரியா ரெளடி கும்பலைச் சோ்ந்த ரோஹித் காலோட் என்பரை இரு சட்டவிரோத கைத்துப்பாக்கிகளுடன் தில்லி போலீஸாா் கைதுசெய்தனா். இதைத்தொடா்ந்து, தில்லியில் உள்ள குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆயுதங்கள் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. ராஜஸ்தானின் பஹாடி பகுதியில் ஜூபொ் என்பவரிடமிருந்து, ஆயுதங்களை வாங்கியதாக ரோஹித் போலீஸாரிடம் விசாரணையின்போது தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து, சட்டவிரோத ஆயுதங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சோ்ந்த ஹா்விந்தா் சிங், சோனு சிங், முபின், ஷொ் முகமது என்ற ஷெரு, ஜூபா் ஆகியோரை பல மாதங்கள் கண்காணித்து வந்த தில்லி காவல் துறையினா், ராஜஸ்தான் மாநில காவல் துறையின் உதவியுடன் கைதுசெய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.