விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

மீண்டும் தலைதூக்கும் கரோனா! ஜார்க்கண்டில் புதியதாக 2 பாதிப்புகள் உறுதி!

ஜார்க்கண்டில் புதியதாக 2 கரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :29 மே 2025, 6:23 pm IST

ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதியதாக 2 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2 நாள்களில் புதியதாக 2 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் மும்பையிலிருந்து திரும்பிய நபர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியானது. அதன்மூலம், ஜார்க்கண்டின் முதல் பாதிப்பு பதிவாகியது.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 2 பேர் மருத்துவமனைகளிலும், ஒருவர் அவரது வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளை மாநில தலைநகர் ராஞ்சி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டாலும், மக்கள் கூட்டம் அதிகமுள்ள பகுதிகளிலும் முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு ராஞ்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மக்கள் யாரும் நோய் தொற்று உறுதியாகாமல் எந்தவொரு மருத்துக்களையும் உட்கொள்ள வேண்டாமெனவும்; மூச்சுவிடுவதில் சிரமம், கடுமையான காய்ச்சல் அல்லது இருமல் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ உதவிகளைப் பெறுமாறும் அந்த சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.