ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதியதாக 2 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், மீண்டும் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2 நாள்களில் புதியதாக 2 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அம்மாநிலத்தில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் மும்பையிலிருந்து திரும்பிய நபர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியானது. அதன்மூலம், ஜார்க்கண்டின் முதல் பாதிப்பு பதிவாகியது.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 2 பேர் மருத்துவமனைகளிலும், ஒருவர் அவரது வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளை மாநில தலைநகர் ராஞ்சி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
கரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டாலும், மக்கள் கூட்டம் அதிகமுள்ள பகுதிகளிலும் முகக்கவசம் அணியுமாறு மக்களுக்கு ராஞ்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், மக்கள் யாரும் நோய் தொற்று உறுதியாகாமல் எந்தவொரு மருத்துக்களையும் உட்கொள்ள வேண்டாமெனவும்; மூச்சுவிடுவதில் சிரமம், கடுமையான காய்ச்சல் அல்லது இருமல் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவ உதவிகளைப் பெறுமாறும் அந்த சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கர்நாடகத்தைக் கலங்கடிக்கும் கரோனா: ஒருவர் பலி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நிகழாண்டில் இதுவரை 162 பேருக்கு டெங்கு பாதிப்பு: தில்லி மாநகராட்சி

கேரளத்தில் வேகமாகப் பரவும் ஷிகெல்லா தொற்று: வயநாட்டில் மேலும் 7 சிறாா்கள் பாதிப்பு

கேரளத்தில் நிபா வைரஸ் எச்சரிக்கை: ஒருவருக்குத் தொற்று பாதிப்பு!

சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



