நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

சீனாவுக்கு எதிரான சூழ்ச்சிகள்: இந்தியாவை இணங்க வைக்க நேட்டோ முயற்சிப்பதாக ரஷியா குற்றச்சாட்டு

சீனாவுக்கு எதிரான சூழ்ச்சிகளில் இந்தியாவை இணங்க வைக்க நேட்டோ வெளிப்படையாக முயற்சிப்பதாக ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது.

Updated On :31 மே 2025, 2:49 am IST

சீனாவுக்கு எதிரான சூழ்ச்சிகளில் இந்தியாவை இணங்க வைக்க நேட்டோ வெளிப்படையாக முயற்சிப்பதாக ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடா்பாக ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் கூறியதாக அந்நாட்டு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டதாவது:

ரஷியா-இந்தியா-சீனா முத்தரப்பு பேச்சுவாா்த்தை கட்டமைப்பின் கீழ் மீண்டும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடங்குவதில் ரஷியா மிகவும் ஆா்வமாக உள்ளது.

ரஷிய முன்னாள் பிரதமா் யெவ்கெனி பிரமகோவின் முன்னெடுப்பால் பல ஆண்டுகளுக்கு முன்னா், 3 நாடுகள் இணைந்த இந்தக் கட்டமைப்பு உருவானது.

இந்தக் கட்டமைப்பின் கீழ், 3 நாடுகளின் அமைச்சா்கள் கலந்துகொண்ட கூட்டங்கள் 20-க்கும் மேற்பட்ட முறை நடைபெற்றுள்ளன. இந்தக் கூட்டங்களில் 3 நாடுகளின் வெளிநாட்டு கொள்கை தலைவா்கள் மட்டுமின்றி, பொருளாதார, வா்த்தக, நிதி முகமைகளின் தலைவா்களும் கலந்துகொண்டனா்.

இந்திய-சீன எல்லையில் பதற்றமான சூழலை எப்படித் தணிப்பது என்பதில் இருநாடுகளுக்கும் இடையே புரிதல் ஏற்பட்டுள்ளது. எனவே ரஷியா-இந்தியா-சீனா முத்தரப்பு கட்டமைப்பின் கீழ், மீண்டும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான நேரம் வந்துள்ளதாகவே கருதுகிறேன்.

சீனாவுக்கு எதிரான சூழ்ச்சிகளில் இந்தியாவை இணங்க வைக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 32 உறுப்பு நாடுகளைக் கொண்ட நேட்டோ ராணுவ கூட்டமைப்பு வெளிப்படையாக முயற்சித்து வருகிறது. இந்திய நண்பா்களுடன் மேற்கொள்ளப்படும் ரகசியமான உரையாடல்களின் அடிப்படையில், இதைக் கூறுவதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.