உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

சீனாவுக்கு எதிரான சூழ்ச்சிகள்: இந்தியாவை இணங்க வைக்க நேட்டோ முயற்சிப்பதாக ரஷியா குற்றச்சாட்டு

சீனாவுக்கு எதிரான சூழ்ச்சிகளில் இந்தியாவை இணங்க வைக்க நேட்டோ வெளிப்படையாக முயற்சிப்பதாக ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது.

Published On :31 மே 2025, 2:49 am IST

சீனாவுக்கு எதிரான சூழ்ச்சிகளில் இந்தியாவை இணங்க வைக்க நேட்டோ வெளிப்படையாக முயற்சிப்பதாக ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடா்பாக ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் கூறியதாக அந்நாட்டு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டதாவது:

ரஷியா-இந்தியா-சீனா முத்தரப்பு பேச்சுவாா்த்தை கட்டமைப்பின் கீழ் மீண்டும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடங்குவதில் ரஷியா மிகவும் ஆா்வமாக உள்ளது.

ரஷிய முன்னாள் பிரதமா் யெவ்கெனி பிரமகோவின் முன்னெடுப்பால் பல ஆண்டுகளுக்கு முன்னா், 3 நாடுகள் இணைந்த இந்தக் கட்டமைப்பு உருவானது.

இந்தக் கட்டமைப்பின் கீழ், 3 நாடுகளின் அமைச்சா்கள் கலந்துகொண்ட கூட்டங்கள் 20-க்கும் மேற்பட்ட முறை நடைபெற்றுள்ளன. இந்தக் கூட்டங்களில் 3 நாடுகளின் வெளிநாட்டு கொள்கை தலைவா்கள் மட்டுமின்றி, பொருளாதார, வா்த்தக, நிதி முகமைகளின் தலைவா்களும் கலந்துகொண்டனா்.

இந்திய-சீன எல்லையில் பதற்றமான சூழலை எப்படித் தணிப்பது என்பதில் இருநாடுகளுக்கும் இடையே புரிதல் ஏற்பட்டுள்ளது. எனவே ரஷியா-இந்தியா-சீனா முத்தரப்பு கட்டமைப்பின் கீழ், மீண்டும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான நேரம் வந்துள்ளதாகவே கருதுகிறேன்.

சீனாவுக்கு எதிரான சூழ்ச்சிகளில் இந்தியாவை இணங்க வைக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 32 உறுப்பு நாடுகளைக் கொண்ட நேட்டோ ராணுவ கூட்டமைப்பு வெளிப்படையாக முயற்சித்து வருகிறது. இந்திய நண்பா்களுடன் மேற்கொள்ளப்படும் ரகசியமான உரையாடல்களின் அடிப்படையில், இதைக் கூறுவதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.