மறைந்த அசாமிய பாடகர் ஸுபீன் கர்க்கிற்கு, அவரது உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் அரசு சார்பில் நினைவிடம் அமைக்க அசாம் அரசு திட்டமிட்டுள்ளது.
அசாமி, ஹிந்தி மற்றும் வங்க மொழிகளில் முன்னணி பாடகராகவும், இந்தியா முழுவதும் 38,000-க்கும் அதிகமான மொழிகளில் பாடல்கள் பாடி பிரபலமாக வலம்வந்தவர் ஸுபீன் கார்க் (வயது 52).
இவர் சிங்கப்பூரில் நடைபெற்ற ‘வடகிழக்கு நிகழ்ச்சி’யில் பங்கேற்க சென்றபோது ஆழ்கடல் சாகசத்தில் (ஸ்கூபா டைவிங்) ஈடுபட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டு செப்.19 ஆம் தேதி மாலை மரணமடைந்தார்.
சிங்கப்பூரில் உடற்கூராய்வு செய்யப்பட்டு விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்ட ஸுபீன் கர்கின் உடல், மீண்டும் உடல்கூராய்வு செய்யப்பட்டு அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டி போஹேஸ்வர் விளையாட்டு திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு ஸுபீனுக்கு அஞ்சலி செலுத்த பல லட்சக்கணக்கான திரண்டனர்.
ஸுபீனின் மறைவையொட்டி, அசாம் மாநிலத்தில் மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. பின்னர், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கமர்குச்சி கிராமத்தில் கர்க்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக, அசாம் மாநிலத்தின் சோனாப்பூர் வருவாய் வட்டத்தில் உள்ள கமர்குச்சி கிராமத்தில், கர்க்கின் உடலை தகனம் செய்யும் இடத்தில் அசாம் முதல்வர் ஹிமந்தபிஸ்வ சர்மா பார்வையிட்டார்.
அவரது உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் சுமார் 10 பிக்கா (6.2 ஏக்கர்) இடத்தில் நினைவிடம் அமைக்க அசாம் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை முதல்வர் ஹிமந்தபிஸ்வ சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.
Summary
Zubeen Garg memorial to be built in Jorhat: Assam CM
இதையும் படிக்க... பாடகர் ஸுபீன் கர்க் உடல் தகனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!

தமிழக அமைச்சர்களை சந்தித்தார் பாடகர் வேடன்!
திவிஷா சர்மா மரணம்: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!

கோவை பாலியல் வன்கொடுமை: சிறுமியின் உடல் சொந்த ஊரில் தகனம்!
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46


