செப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

பாடகர் ஸுபீன் கர்க்கிற்கு நினைவிடம்! - அசாம் அரசு அறிவிப்பு

பாடகர் ஸுபீன் கர்க்குக்கு அரசு சார்பில் நினைவிடம் அமைக்கவுள்ளதைப் பற்றி...

News image

பாடகர் ஸுபின் கர்க்கின் இறுதி ஊர்வலத்தில்... - (ஏபி)

Updated On :23 செப்டம்பர் 2025, 1:10 pm IST

மறைந்த அசாமிய பாடகர் ஸுபீன் கர்க்கிற்கு, அவரது உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் அரசு சார்பில் நினைவிடம் அமைக்க அசாம் அரசு திட்டமிட்டுள்ளது.

அசாமி, ஹிந்தி மற்றும் வங்க மொழிகளில் முன்னணி பாடகராகவும், இந்தியா முழுவதும் 38,000-க்கும் அதிகமான மொழிகளில் பாடல்கள் பாடி பிரபலமாக வலம்வந்தவர் ஸுபீன் கார்க் (வயது 52).

இவர் சிங்கப்பூரில் நடைபெற்ற ‘வடகிழக்கு நிகழ்ச்சி’யில் பங்கேற்க சென்றபோது ஆழ்கடல் சாகசத்தில் (ஸ்கூபா டைவிங்) ஈடுபட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டு செப்.19 ஆம் தேதி மாலை மரணமடைந்தார்.

சிங்கப்பூரில் உடற்கூராய்வு செய்யப்பட்டு விமானம் மூலம் இந்தியா கொண்டுவரப்பட்ட ஸுபீன் கர்கின் உடல், மீண்டும் உடல்கூராய்வு செய்யப்பட்டு அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டி போஹேஸ்வர் விளையாட்டு திடலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு ஸுபீனுக்கு அஞ்சலி செலுத்த பல லட்சக்கணக்கான திரண்டனர்.

ஸுபீனின் மறைவையொட்டி, அசாம் மாநிலத்தில் மூன்று நாள்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது. பின்னர், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கமர்குச்சி கிராமத்தில் கர்க்கின் உடல் தகனம் செய்யப்பட்டது.

முன்னதாக, அசாம் மாநிலத்தின் சோனாப்பூர் வருவாய் வட்டத்தில் உள்ள கமர்குச்சி கிராமத்தில், கர்க்கின் உடலை தகனம் செய்யும் இடத்தில் அசாம் முதல்வர் ஹிமந்தபிஸ்வ சர்மா பார்வையிட்டார்.

அவரது உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் சுமார் 10 பிக்கா (6.2 ஏக்கர்) இடத்தில் நினைவிடம் அமைக்க அசாம் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனை முதல்வர் ஹிமந்தபிஸ்வ சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.

Summary

Zubeen Garg memorial to be built in Jorhat: Assam CM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.