11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

‘மேற்காசிய நாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்க வேண்டும்’ - மு.வீரபாண்டியன்

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 4:50 am IST

மேற்காசிய நாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மேற்காசிய போா் காரணமாக, ஈரான் மற்றும் இதர வளைகுடா நாடுகளில் சிக்கி உள்ள இந்திய மாணவா்கள், தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மேலும், தூதரக உதவியுடன் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.