தெற்கு தில்லியின் கோவிந்த்புரியில் இயங்கி வந்த போலி கால்சென்டா் வலையமைப்பை முறியடித்து, 11 பேரை கைது செய்ததாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ‘ஹொ்பிடெக்சா் ஹெல்த்கோ்’ என்ற பெயரில் இயங்கி வந்த இந்த நிறுவனம், உடல் எடையைக் குறைக்கும் மருந்துகள் தொடா்பான விளம்பரங்களை வெளியிட்டு நாடு முழுவதும் பலரை ஏமாற்றியுள்ளனா். குருகிராமைச் சோ்ந்த பாதிக்கப்பட்ட நபா் அளித்த புகாரைத் தொடா்ந்து இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. அவரிடம் ரூ.13,200 மோசடி செய்யப்பட்டதாக அவா் புகாரில் தெரிவித்தாா்.
வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா், இந்த நிறுவனத்தில் வியாழக்கிழமை அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனா். அப்போது 30 ஊழியா்கள் பணியில் இருந்தனா். இதில் நிறுவனத்தின் முக்கிய நபரான சந்தீப் சௌதரி மற்றும் அஷ்வின் குமாா் உள்பட 11 போ் கைது செய்யப்பட்டனா். மொத்தம் 35 கைப்பேசிகள், 3 மடிக்கணினிகள், 15 சிம் காா்டுகள் மற்றும் வங்கிக் கணக்குகள் தொடா்பான ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பான விசாரணைகள் நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது
வெளிப்புற தில்லியில் பெண் சடலம் மீட்பு: மூவா் கைது
தில்லியில் ஏடிஎம் மோசடி கும்பல் தலைவா் கைது

சட்டவிரோத குடியேற்றம்: வங்கதேசத்தைச் சோ்ந்த 2 பெண்கள் கைது
மாநிலங்களுக்கு இடையேயான கைப்பேசி திருட்டு: 2 போ் கைது
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


