டிசிஎஸ்-ன் நாசிக் நகரில் இயங்கி வந்த தனியார் பிபீஓ அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளர்களாக பணியாற்றியபடி காவலர்கள் பல்வேறு விவகாரங்களில் புலனாய்வு செய்து காவல்துறைக்கு அளித்த முக்கிய தகவலின் அடிப்படையில் மிகப்பெரிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது குறித்து ஒன்பது முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மூத்த மனிதவள அதிகாரி உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது மிக மோசமான குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.
பணி அழுத்தம் காரணமாக, 20 வயது மதிக்கத்தக்க இந்து பெண் ஒருவர், ரமலான் நோன்பு கடைபிடிப்பதாக கடந்த பிப்ரவரி மாதம் காவல்துறையினருக்கு ஒரு புகார் வந்தது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய பல்வேறு கோண விசாரணையில், பணியிடத்தில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள், கட்டாயப்படுத்துதால், மதரீதியிலான அழுத்தம் போன்ற பல குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
கிட்டத்தட்ட 150 பேர் வேலை செய்யும் ஒரு பணியிடத்தில், தங்கள் மகள் பணியாற்றத் தொடங்கியதிலிருந்து, அவரது பழக்க வழக்கங்களில் பல்வேறு மாற்றங்கள் தெரிந்ததால், அவரை பணியிலிருந்து நிறுத்திவிட்டதாக காவல்துறைக்கு ஒரு பெற்றோர் தெரிவித்திருக்கிறார்கள்.
உடனடியாக, காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் மற்றும் தலைமைக் காவலர் ஒருவரை அந்த அலுவலகத்துக்குள் துப்புரவுப் பணியாளராக அனுப்பினர். அவர்கள் அங்கு பணியாற்றியபடி, பணியாளர்களிடம் பேசிய அலுவலகத்தில் நடப்பதை தங்களது உயரதிகாரிகளுக்கு நாள்தோறும் தெரிவித்திருக்கிறார்கள்.
காவல்துறை நடத்திய புலனாய்வில், தனிஷ் ஷேக், திருமண ஆசை காட்டி பெண்களை பலாத்காரம் செய்வது, மதம் மாற்றுவது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார். மற்றொரு டௌஸிப் அடைர் என்பவரது செல்போனில் இந்து பெண், முஸ்லிம் ஆடை அணிந்திருக்கும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
அங்குள்ள 18 - 25 வயதுக்குள்பட்ட பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்டு மதரீதியிலான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதலில் யாரும் புகார் கொடுக்க முன்வரவில்லை. இவர்கள் கைது செய்யப்பட்ட பிறகே பலரும் புகார் கொடுத்துள்ளனர்.
பெண்களை அனுமதியில்லாமல் தொடுவது, பெண்களை நிறத்தின் அடிப்படையில் விமர்சிப்பது, மதம் மாற்ற வற்புறுத்துவது, எதிர்த்தால் பணி அழுத்தம் கொடுத்து அவர்களை துன்புறுத்துவது போன்ற பல்வேறு குற்றங்களில் கைது செய்யப்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதில் ஒரு பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் குற்றம் குறித்து புகார் வந்தும் நடவடிக்கை எடுக்காத மேலாளர்களும் அடங்குவர். குற்றவாளிகளுக்கு வெளியிலிருந்து பணம் ஏதேனும் வருகிறதா என்றும் விசாரணை நடத்தப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நபர்களை டிசிஎஸ் உடனடியாக பணி நீக்கம் செய்திருப்பதாக அறிவித்துள்ளது. விசாரணைக்கு நிறுவனம் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிசிஎஸ் பங்குகள் 2.5% சரிவுடன் நிறைவு!

நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு: முதல்வர் ரமலான் வாழ்த்து!

குருகிராம்: ரூ.25,000 லஞ்சம் வாங்கியதாக சப்-இன்ஸ்பெக்டா், உதவியாளா் கைது
எளிதாகக் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி தில்லியை சோ்ந்தவரிடம் ரூ.20,000 மோசடி! பெண் கைது!!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


