மகாராஷ்டிரத்தில் உள்ள இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுவரும் நிலையில், 9 மணி நிலவரப்படி பாராமதியில் 8 சதவிகிதம், ரஹுரியில் 6 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு நிறைவடையவுள்ளது.
மகராஷ்டிரத்தின் முன்னாள் துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜீத் பவார், ஜனவரி 28 அன்று நடந்த விமான விபத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பாராமதி சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அவசியமானது.
அஜீத் பவாரின் மனைவியும், துணை முதல்வரும், என்சிபி தலைவருமான சுநேத்ரா பவார் மற்றும் 22 பிற வேட்பாளர்கள் இத்தேர்தல் களத்தில் உள்ளனர்.
கடந்த ஆண்டு அக்டோபரில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சிவாஜி கார்டிலே காலமானதைத் தொடர்ந்து, ரஹுரி சட்டப்பேரவைத் தொகுதி காலியானது. ரஹுரி தொகுதியில் சிவாஜி கார்டிலேவின் மகன் அக்ஷய் கார்டிலே போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து என்சிபி (எஸ்பி) வேட்பாளர் கோவிந்த் மொகாடே மற்றும் வஞ்சித் பகுஜன் அகாடியைச் சேர்ந்த சந்தோஷ் சால்கே ஆகியோர் களத்தில் உள்ளனர்.
Summary
Eight per cent voter turnout was recorded in Baramati and six per cent in Rahuri in the first two hours of voting on Thursday as polling was underway for bypolls to the two assembly constituencies in Maharashtra, election officials said.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக தேர்தல்: காலை 11 மணி வரை 37.56% வாக்குகள் பதிவு!

திண்டுக்கல் மாவட்டத்தில் 2,301 மையங்களில் இன்று வாக்குப் பதிவு

தோ்தல் பணியில் 3,850 போலீஸாா்

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! பிற்பகல் 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



