திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

ஆடம்பர வாழ்க்கைக்கு கேஜரிவால் பழகிவிட்டார்: பர்வேஷ் வர்மா குற்றச்சாட்டு!

கேஜரிவால் குறித்து பாஜகவின் பர்வேஷ் வர்மா..

News image

பர்வேஷ் வர்மா - DPS

Updated On :25 ஏப்ரல் 2026, 7:58 am

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் ஆடம்பர வாழ்க்கைக்குப் பழவிட்டதாக பாஜகவின் பர்வேஷ் வர்மா குற்றம் சாட்டினார்.

அரவிந்த் கேஜரிவால் முதல்வர் பதிவிலிருந்து விலகியதையடுத்து, அவருக்கு லோதி எஸ்டேடில் புதிதாகப் பங்களா ஒதுக்கப்பட்டது. இதுகுறித்து பாஜக கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பர்வேஷ் வர்மா கூறியதாவது,

கேஜரிவால் ஆடம்பரமான வாழ்க்கைக்குப் பழகிவிட்டார். ஷீஷ் மஹாலில் இருந்து வெளியேறிய அவர் பஞ்சாபிற்குச் சென்றார். லோதி எஸ்டேட்டில் வகை VII பங்களா அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பங்களாவின் படங்களைக் காண்பித்த அமைச்சர், மத்திய பொதுப்பணித்துறை பொதுவாகப் பங்களாக்களுக்காக இவ்வளவு பெரிய தொகையைச் செலவிடுவதில்லை. அந்தப் பங்களாவில் உயர்தர வசதிகளை உருவாக்குவதற்கு கேஜரிவால் தனது சொந்தப் பணத்தைச் செலவிடப்பட்டுள்ளதாகவும், ஷீஷ் மஹால் 2ஐ அவர் உருவாகியுள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

அந்தப் பங்களாவிற்காக எவ்வளவு பணம் செலவிடப்பட்டது என்பதையும், அந்தப் பணத்திற்கான ஆதாரம் என்ன என்பதையும் ஆம் ஆத்மி கட்சியும் கேஜரிவால் தெளிவுபடுத்த வேண்டும்.

தற்போது கேஜரிவால் குடியேறியுள்ள, லோதி எஸ்டேட் எண் 95-இல் அமைந்துள்ள அவரது புதிய இல்லத்தில் ஐந்து படுக்கையறைகளும், நான்கு வரவேற்பறைகளும் இருப்பதாக வர்மா தெரிவித்தார்.

பர்வேஷ் வர்மாவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து உடனடியாக எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் புது தில்லி தொகுதியில் கேஜரிவாலைத் தோற்கடித்த வர்மா, ஆம் ஆத்மி கட்சியின் ஊழலே, அக்கட்சியின் ஏழு மாநிலங்களவை உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகியதற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டினார்.

Summary

The Bharatiya Janata Party on Saturday cornered Aam Aadmi Party national convener Arvind Kejriwal over the new bungalow allotted to him at Lodhi Estate here, dubbing it as "Sheesh Mahal 2" and alleging expenditure of private money to build amenities in it.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.