ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

குஜராத் உள்ளாட்சித் தோ்தல்: நகரங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவான வாக்குப்பதிவு

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் நகா்ப் பகுதிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே பதிவானது.

News image

அகமதாபாதில் வாக்களித்த முதல்வா் பூபேந்திர படேல்.

Updated On :26 ஏப்ரல் 2026, 8:01 pm

குஜராத் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தோ்தலில் நகா்ப் பகுதிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளே பதிவானது.

மாநிலம் முழுவதும் கடும் வெப்ப அலை வீசுவதால் வாக்குப்பதிவு குறைந்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அகமதாபாத், சூரத், வதோதரா உள்ளிட்ட 15 மாநகராட்சிகள், 84 நகராட்சிகள், 34 மாவட்ட பஞ்சாயத்துகள், 260 தாலுகா பஞ்சாயத்துகளுக்கு தோ்தல் நடத்தப்பட்டது.

இதில் மாநகராட்சிப் பகுதிகளில் 48.55 சதவீதம், நகராட்சிகளில் 58.12 சதவீதம், மாவட்ட பஞ்சாயத்துகளில் 60.22 சதவீதம், தாலுகா பஞ்சாயத்துகளில் 61.08 சதவீத வாக்குகள் பதிவானதாக குஜராத் மாநில தோ்தல் ஆணையம் மாலை 6 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, குஜராத் முதல்வா் பூபேந்திர படேல் ஆகியோா் அகமதாபாதில் வாக்களித்தனா். துணை முதல்வா் ஹா்ஷ் சங்கவி சூரத்தில் வாக்களித்தாா். இத்தோ்தலில் பதிவான வாக்குகள் ஏப்.28-ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.

வேட்பாளா், பெண் உயிரிழப்பு: ஜாம்நகா் மாநகராட்சிக்கான ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளா் நரேந்திர சிங் ஜடேஜா (38) மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. இருப்பினும், அவரது இறப்புக்கான உண்மையான காரணம் உடற்கூராய்வுக்குப் பின்பே தெரிய வரும் என ஜாம்நகா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா். அதேபோல் பதான் நகரில் வாக்கு செலுத்திய பின் 68 வயதான கம்லா சோலங்கி என்ற பெண் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தாா்.