சென்னை - பெங்களூரு இடையேயான புல்லட் ரயில் சேவையால் பயண நேரம் 73 நிமிடங்களாகக் குறைக்கப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தரவு மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது, "புல்லட் ரயில் நம் அனைவரின் கனவுத் திட்டம். இந்தச் சேவை, நமது பயண நேரத்தைக் குறைத்து, முக்கிய நகரங்களைக் கொண்ட ஒரு ஒருங்கிணைந்த பொருளாதார மண்டலத்தை உருவாக்கும்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - PTI
புல்லட் ரயில் சேவையால், அமராவதி - ஹைதராபாத் இடையேயான பயண நேரம் வெறும் 70 நிமிடங்களாகக் குறைக்கப்படும். அமராவதி - சென்னை இடையேயான பயணமும் 112 நிமிடங்களாகக் குறைக்கப்படும்.
ஹைதராபாத் - புணே இடையே 1 மணி 55 நிமிடங்களும், புணே - மும்பை இடையே 48 நிமிடங்களும், ஹைதராபாத் - பெங்களூரு இடையே 2 மணி 8 நிமிடங்களாகவும், அமராவதி - ஹைதராபாத் இடையே 70 நிமிடங்களும், சென்னை - பெங்களூரு இடையேயான பயண நேரம் 73 நிமிடங்களாகவும் இருக்கும். சென்னை - பெங்களூரு இடையேயான திட்டம் விரைவில் தொடங்கப்படும்.
இந்த அதிவேக ரயில் சேவையானது, முக்கிய நகரங்களை இணைத்து, குறிப்பிடத்தக்க முக்கிய முன்னேற்றங்களைக் கொண்டுவரும்" என்று தெரிவித்தார்.
Summary
Railway Minister Ashwini Vaishnaw shares Bullet train plan for South India
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!

1,068 ஹெக்டேர் ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பு: ரயில்வே அமைச்சர்

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி ஸ்டில்ஸ்

இந்திய ஐஃபோன் தொழிற்சாலைகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரிகின்றனர்!
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை



