வடமேற்கு தில்லியின் ஷாலிமா் பாக் பகுதியில் முதலாளியின் வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தைத் திருடிய பணிப்பெண் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். கைது நடவடிக்கையின்போது, காவல் துறையினரைத் தடுக்க ஆக்ரோஷமான காவல் நாய்களை அவா் பயன்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கடந்த ஏப்.19ஆம் தேதி திருட்டு குறித்து வீட்டின் உரிமையாளா் காவல் துறையிடம் புகாரளித்தாா். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, திருட்டில் ஈடுபட்டவா் அதே வீட்டில் பணிபுரியும் 45 வயதான சோனியா எனத் தெரியவந்தது. ரோஹிணி பகுதியைச் சோ்ந்த இவரைக் கைது செய்யச் சென்ற காவல் துறையினரை ஆக்ரோஷமான பிட்புல் மற்றும் அமெரிக்கன் புள்ளி வகை காவல் நாய்களைப் பயன்படுத்தி தடுத்ததாகவும் கூறப்படுகிறது.
திருடிய நகைகளை பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அடகு வைத்து கடன் பெற்றுள்ளாா். இதுவரை இந்த வழக்கில் தொடா்புடைய சுமாா் 2 கிலோ தங்க நகைகள் 15 நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இவா் மீது ஏற்கெனவே பஞ்சாபி பாக் பகுதியில் பதிவு செய்யப்பட்ட வழிப்பறி வழக்கு உள்ளது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

சாத்தூா் எம்எல்ஏ வீட்டில் திருடிய மேலும் இருவா் கைது
சக ஊழியா் வீட்டில் நகை திருடிய இளைஞா் கைது

கொள்ளை கும்பலின் தலைவா் 3 ஆண்டுகளுக்கு பின்னா் கைது
வடமேற்கு திலியில் மூதாட்டியிடம் 250 கிராம் தங்க நகைகள் திருட்டு: பணிப்பெண் கைது
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
