வடமேற்கு தில்லியின் ஷாலிமா் பாக் பகுதியில் முதலாளியின் வீட்டில் இருந்து நகை மற்றும் பணத்தைத் திருடிய பணிப்பெண் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். கைது நடவடிக்கையின்போது, காவல் துறையினரைத் தடுக்க ஆக்ரோஷமான காவல் நாய்களை அவா் பயன்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கடந்த ஏப்.19ஆம் தேதி திருட்டு குறித்து வீட்டின் உரிமையாளா் காவல் துறையிடம் புகாரளித்தாா். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, திருட்டில் ஈடுபட்டவா் அதே வீட்டில் பணிபுரியும் 45 வயதான சோனியா எனத் தெரியவந்தது. ரோஹிணி பகுதியைச் சோ்ந்த இவரைக் கைது செய்யச் சென்ற காவல் துறையினரை ஆக்ரோஷமான பிட்புல் மற்றும் அமெரிக்கன் புள்ளி வகை காவல் நாய்களைப் பயன்படுத்தி தடுத்ததாகவும் கூறப்படுகிறது.
திருடிய நகைகளை பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் அடகு வைத்து கடன் பெற்றுள்ளாா். இதுவரை இந்த வழக்கில் தொடா்புடைய சுமாா் 2 கிலோ தங்க நகைகள் 15 நிதி நிறுவனங்களில் அடகு வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இவா் மீது ஏற்கெனவே பஞ்சாபி பாக் பகுதியில் பதிவு செய்யப்பட்ட வழிப்பறி வழக்கு உள்ளது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கொள்ளை கும்பலின் தலைவா் 3 ஆண்டுகளுக்கு பின்னா் கைது
வடமேற்கு திலியில் மூதாட்டியிடம் 250 கிராம் தங்க நகைகள் திருட்டு: பணிப்பெண் கைது
ஷாலிமாா் பாக்: இணையவழி வணிக கடையில் கொள்ளை - இளைஞா் கைது
வேலை பாா்த்த வீட்டில் நகை திருடிய பெண் கைது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

