விவசாயிகளுக்கு ரூ. 17,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்கப்படும்! அமைச்சர்விரைவில் பிளாஸ்டிக் ரூ.10, ரூ.20 தாள்கள்! புழக்கத்தில் இருக்கும் பணம் என்னவாகும்?நிலவில் மோதிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் பகுதி! அதிர்ச்சி விடியோ! எவ்வளவு பெரிய பள்ளம்?அடுத்த ஜென்மம் எதற்கு? இப்போதே விவசாயிகளுக்கு செய்யலாமே! பிரேமலதாதைரியம் இருந்தால் முதல்வர் வாயைத் திறக்கட்டும்! உதயநிதி சவால்! வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை: ஸ்டாலின்வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்: முதல்வர் விஜய்உருப்படியாக எதுவுமில்லை! வேளாண் பட்ஜெட்டை விமர்சித்த உதயநிதி! அமைச்சர் ஆனந்துடன் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் அணி சந்திப்பு!கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள்!வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்: எடப்பாடி பழனிசாமிதஞ்சாவூரில் நம்மாழ்வார் வேளாண் பாலிடெக்னிக் கல்லூரி! பட்ஜெட்டில் அறிவிப்பு!எல் நினோவால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம்! அமைச்சர் வினோத் உரைதமிழக வேளாண் பட்ஜெட்! வெற்றி விவசாய விருதுகள் அறிவிப்புஉயிர்ம உர விவசாயத்தில் சிறந்து விளங்குவோருக்கு நம்மாழ்வார் விருதுவிவசாயிகளின் இலவச மின்சாரத்துக்கு ரூ. 7,432 கோடி ஒதுக்கீடு!
/

காஷ்மீரின் உரிமை மீட்கும் வரை போராட்டம் ஓயாது! ஃபரூக் அப்துல்லா

காஷ்மீரின் உரிமை மீட்கும் வரை போராட்டம் தொடரும் என்பதைப் பற்றி..

News image

ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா - (கோப்புப் படம்)

Updated On :6 ஆகஸ்ட் 2026, 1:20 pm IST

ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்கும் வரை போராட்டங்கள் தொடரும் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு, ஆகஸ்ட் 5, 2019 அன்று 370-வது பிரிவை ரத்து செய்தது. இதன் மூலம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அரசியலமைப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் கூறிய அப்துல்லா,

ஆகஸ்ட் 5, 2019 அன்று நடந்தது அரசியலமைப்புக்கு முரணானது என்பது அனைவருக்கும் தெரியும்.

எனவே, தற்போது நாடு முழுவதும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு உள்ளது. காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான போராட்டம் தொடரும்.

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது குறித்த தனது கொள்கை என்ன என்று கேட்டபோது,

​​எனக்கென்று தனிப்பட்ட கொள்கை எதுவும் இல்லை, ஆனால், தேசிய மாநாட்டுக் கட்சிக்குத்தான் கொள்கை உள்ளது.

பிடிபி தலைவர் மெஹபூபா முஃப்திக்கு எதிராக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்த கருத்துகள் குறித்த கேள்விக்கு, அது குறித்து அவரே பதிலளிக்கலாம் என்று அவர் கூறினார்.

ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் இரண்டாம் ஆண்டு நிறைவு நாளான புதன்கிழமையன்று, போராட்டங்களும் கொண்டாட்டங்களும் நடைபெற்றன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்கக் கோரி, நேஷனல் கான்பரன்ஸ் மற்றும் எதிர்க்கட்சியான பிடிபி ஆகியவை அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களை நடத்தின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்