உரிமைக்காக போராடும் ஜென் ஸீக்கள் தேச விரோதிகள் அல்ல: மோகன் பாகவத்தொகுதி மறுவரையறை: முதல்வர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை!கோதாவரி - காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த பிரதமருக்கு முதல்வர் வலியுறுத்தல்!ஊழலைக் குறைத்தாலே போதும்; மதுவிற்று வருவாயை அதிகரிக்க வேண்டும் என்ற கட்டாயம் அரசுக்கு இல்லை: அமைச்சர் விக்னேஷ்ஆன்லைனில் டாஸ்மாக் மதுபானத்தை முன்பதிவு மட்டுமே செய்ய முடியும்; வீடுகளுக்கு டெலிவரி கிடையாது: அமைச்சர் விக்னேஷ்வல்லுறவு வழக்கு! பத்திரிகையாளர் தருண் தேஜ்பாலுக்கு 10 ஆண்டுகள் சிறை!
/

மேற்காசிய போர்! பிரதமர் மோடி உடன் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு உரையாடல்!

பிரதமர் நரேந்திர மோடி உடன் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு செல்போனில் உரையாடல்...

News image

பிரதமர் நெதன்யாகு உடன் பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 8:05 pm IST

பிரதமர் நரேந்திர மோடி உடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செல்பொன் வாயிலாக உரையாடியுள்ளார்.

மேற்காசிய நாடுகளில் நடைபெற்று வரும் போர் குறித்து, பிரதமர் மோடியுடன் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு செல்போன் வாயிலாக இன்று (ஆக. 6) உரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உரையாடலில், இருநாடுகள் இடையே பல்வேறு துறைகளில் கூட்டுறவுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில்,

“சமீபத்தில், மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து பிரதமர் நெதன்யாகு மற்றும் பிரதமர் மோடி தங்களின் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். மேலும், இருநாடுகளின் தலைவர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக மேற்காசிய நாடுகளில் உள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதனால், மேற்காசிய நாடுகள் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தியா மற்றும் இஸ்ரேல் பிரதமர்கள் உரையாடியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

Summary

Israeli PM Netanyahu has spoken with PM Modi over the phone.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.