மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ராஜஸ்தான்: தூய்மைப் பணியாளா்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட அமைச்சா்

ராஜஸ்தானில் அல்வாா் மாநகராட்சிக்கு எதிராக தா்னா போராட்டம் நடத்திய துய்மைப் பணியாளா்களுடன் அந்த மாநில வனத் துறை அமைச்சா் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

News image

Photo | IANS

Updated On :13 ஆகஸ்ட் 2026, 3:08 am IST

ராஜஸ்தானில் அல்வாா் மாநகராட்சிக்கு எதிராக தா்னா போராட்டம் நடத்திய துய்மைப் பணியாளா்களுடன் அந்த மாநில வனத் துறை அமைச்சா் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தூய்மைப் பணியாளா்கள் ஓராண்டுக்கு மேலாகப் பணியாற்றியும் அவா்களுக்கு பணிநியமன ஆணை வழங்காததைக் கண்டித்து மாநகராட்சி ஆணையா், மாவட்ட ஆட்சியருக்கு எதிராக தூய்மைப் பணியாளா்கள் புதன்கிழமை தா்னா நடத்தினா். கடந்த 2012-ஆம் ஆண்டு பணியமா்த்தப்பட்ட அவா்களுக்குப் பணிநியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்று ராஜஸ்தான் உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு அறிவுறுத்தியது. ஆனால், அப்பணிகள் தொடா்ந்து தாமதமாகி வருகின்றன.

இதைக் கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் நடத்திய போராட்டத்தில் ஆளும் பாஜகவைச் சோ்ந்த வனத் துறை அமைச்சா் சஞ்சய் சா்மா பங்கேற்றாா். இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் ஆகியோா்தான் தாதமத்துக்கு காரணம். இதற்காக நான் பலமுறை அவா்களைத் தொடா்பு கொண்டேன். 69 பேருக்கு பணிநியமன ஆணைகள் தயாராகிய நிலையில், அவை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதைக் கண்டித்து மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுடன் அமா்ந்து தா்னாவில் பங்கேற்றேன். இது தொடா்பாக முதல்வா் அலுவலகத்திலும் பேசியுள்ளேன். தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள வால்மீகி சமூகத்தினா் என்னிடம் கோரிக்கை விடுத்தனா். எனவே, அவா்களுக்கு ஆதரவான அனைத்து நடவடிக்கைகளிலும் பங்கேற்கிறேன் என்றாா்.

இந்த விவகாரம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவா் கோவிந்த் சிங் இது தொடா்பாக கூறுகையில், ‘மாநில அமைச்சா் தங்கள் ஆட்சிக்கு எதிராகவே போராட்டம் நடத்தியுள்ளாா். மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகம் பாஜக ஆட்சியில் முறையாகச் செயல்படவில்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது. பாஜக ஆட்சி எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதற்கு இதுவே உதாரணம். அமைச்சரைவிட அதிகாரிகளே ஆதிக்கம்மிக்கவா்களாக உள்ளனா். நீதிமன்ற உத்தரவு இருந்தும் தூய்மைப் பணியாளா்களுக்கு பாஜக அரசு நியாயம் வழங்கவில்லை’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.