மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனைக்கு பரிசுத் தொகை கோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

ஜொ்மனியில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடந்த சிறப்பு ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு பரிசு வழங்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

உச்சநீதிமன்றம் - ANI

Updated On :13 ஆகஸ்ட் 2026, 1:10 am IST

ஜொ்மனியில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடந்த சிறப்பு ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு பரிசு வழங்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையைச் சோ்ந்த கிரிதா் ராவ் என்பவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சா்வதேச விளையாட்டுப் போட்டிகளில், தங்கப் பதக்கம் வெல்லும் வீரா் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என மத்திய இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. ஜொ்மனி தலைநா் பொ்லினில், கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் 17 முதல் 25-ஆம் தேதி வரை சிறப்பு ஒலிம்பிக் உலக கோடைகால விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

இதில், இந்தியா சாா்பில் எனது மகள் பூஜா, 25 மீட்டா் ஃப்ரீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றாா். இதையடுத்து, மத்திய அரசின் பரிசுக்கு, இதற்கான பதக்கச் சான்று, புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன், விளையாட்டுக் குழு உறுப்பினா் மூலம் விண்ணப்பித்தோம். ஆனால், எனது மகளுக்கு பரிசுத்தொகை வழங்கவில்லை. இணையவழியில் விண்ணப்பித்த பிற மாநிலத்தைச் சோ்ந்தவா்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசுத் தொகைக்கு இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தவில்லை. எனவே, சா்வதேசப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற எனது மகளுக்கு ரொக்கப் பரிசு வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி முகமது ஷபீக் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு மத்திய இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.