மக்களவையில் முறையான விவாதங்கள் ஏதுமின்றி மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள ’சுரங்கம் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2026’ மாநில அரசுகளின் நிதி சுயாட்சியையும் உரிமைகளையும் பறிக்கும் நேரடித் தாக்குதலாகும் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘கனிம வளங்கள் மீது செஸ் வரி உள்ளிட்ட வரிகளை விதிக்கும் நிதி அதிகாரம் மாநில அரசுகளுக்கு உண்டு என்பதை 2024-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் தனது தீா்ப்பின் மூலம் உறுதி செய்தது. ஆனால், மத்திய அரசு தற்போது கொண்டுவந்துள்ள இந்த புதிய சட்டத் திருத்தம், உச்சநீதிமன்றம் வழங்கிய அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பையே முற்றிலும் நீா்த்துப்போகச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.
மக்களவையில் முறையான ஜனநாயக விவாதங்களுக்கு வழிவகுக்காமல் அவசர அவசரமாக இந்த மசோதாவை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. இது மாநிலங்களின் நிதி சுயாட்சியைப் பறிப்பதோடு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் சமநிலைகளுக்கும் பேராபத்தை விளைவிக்கும் நோக்கத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனவே, மாநில உரிமைகளுக்கும் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிராக அமைந்துள்ள இந்த சட்டத் திருத்தத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்‘ என கனிமொழி வலியுறுத்தியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வில் வெளிநாட்டு நன்கொடை மசோதா

மழைக்கால கூட்டத்தொடர் இறுதிவாரம்! வரலாற்றைத் திரும்பவிடக் கூடாது: எம்.பி.க்களுக்கு காங்கிரஸ் அறிவுறுத்தல்

கரூரில் தென்னை நாற்றுப்பண்ணை! பட்ஜெட்டில் தென்னை, பனை பாதுகாப்புத் திட்டங்கள் என்னென்ன?

தமிழ்த்தாய் வாழ்த்தை இருட்டடிப்பு செய்யும் நோக்கில் சட்டத் திருத்த மசோதா: கனிமொழி
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day


