ஹிமாசலில் பருவமழை பாதிப்பு காரணமாக 197 பேர் பலியானதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹிமாசல் பிரதேசத்தில் ஜூன் 30 முதல் பருவமழை தொடங்கி பெய்து வருகின்றது. கனமழை காரணமாக அங்கு இதுவரை 197 பேர் பலியானதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மழை சார்ந்த பேரிடர்களில் 81 பேரும், சாலை விபத்துகளில் 116 பேரும் பலியாகினர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்கு ரூ. 1,000 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பொதுப்பணித் துறை மற்றும் நீர்ப்பாசனத் துறை போன்றவை பெருமளவு சேதத்தைச் சந்தித்துள்ளன.
ஹிமாசலில் உள்ள அவசரக்கால செயல்பாட்டு மையத்தின் தரவுகளின்படி மாநிலம் முழுவதும் 88 சாலைகள் மூடப்பட்டுள்ளன. இன்று காலை 105 சாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதால் மூடப்பட்ட சாலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கனமழையால் மண்டி மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 32 சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதற்கு அடுத்ததாக குல்லு (25 சாலைகள்) மற்றும் சிர்மூர் (10 சாலைகள்) மாவட்டங்கள் உள்ளன.
மழையின் காரணமாக மாநிலம் முழுவதும் 19 குடிநீர் விநியோகத் திட்டங்கள் பாதிக்கப்பட்டு, மின் விநியோகமும் பாதிப்படைந்துள்ளது.
மாநில அவசரகால நிர்வாக அமைப்புகள் மற்றும் களப்பணியாளர்கள் தொடர்ந்து சீரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதிக்கு சுற்றுலா வரும் மக்கள் கனமழை தொடர்பான செய்திகளைக் கவனமாகப் பார்த்து திட்டமிடுமாறு அரசு நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
Summary
Reports indicate that 197 people have lost their lives due to the impact of the monsoon in Himachal.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பருவமழை: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்ய 15 அதிகாரிகள் நியமனம்!

ஆப்கனில் இயற்கை பேரிடர்களுக்கு 92,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; 97 பேர் பலி: ஐ.நா. தகவல்

பெட்ரோல், டீசல் மீது கைம்பெண், ஆதரவற்றோர் செஸ் வரி விதிப்பு!

வடகிழக்கு மாநிலங்களில் கனமழை வெள்ளம், நிலச்சரிவுக்கு 16 பேர் பலி
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |




