சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சுடிஜிட்டல் கைது செய்து சிறுமி பாலியல் வன்கொடுமை! 3 மாதங்களாக அடைத்து வைத்திருந்தவர் கைதுமொழி எனக்கு ஒரு தடையாக இருக்கிறது! நான் அன்று ஆவேசப்பட்டது உண்மைதான்! மரிய வில்சன்டாடா குழுமத் தலைவர் சந்திரசேகரன் ராஜிநாமா! டாடா பங்குகள் 3% சரிவு!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்!தொகுதி மறுவரையறைக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு வி.சி.க. ஆதரவுதொகுதி மறுவரையறை! முதல்வர் விஜய்யின் தனித் தீர்மானத்துக்கு திமுக ஆதரவு!தொகுதி மறுவரையறை தனித்தீர்மானத்துக்கு அதிமுக எதிர்ப்பு!தொடர்ந்து உயரும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் (ஆக. 12)தொகுதி மறுவரையறை: தனித்தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு!ஆடி அமாவாசை: மேட்டூரில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,689 கன அடியாக அதிகரிப்பு!தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

பெட்ரோல், டீசல் மீது கைம்பெண், ஆதரவற்றோர் செஸ் வரி விதிப்பு!

ஹிமாசலில் பெட்ரோல், டீசல் மீது கைம்பெண், ஆதரவற்றோர் செஸ் வரி விதிக்கப்பட்டது பற்றி...

News image

பெட்ரோல், டீசல் - கோப்புப்படம்

Updated On :12 ஆகஸ்ட் 2026, 3:47 pm IST

ஹிமாசல் பிரதேசத்தில் பெட்ரோல், டீசல் மீது கைம்பெண் மற்றும் ஆதரவற்றோர் நலனுக்கான செஸ் வரி செவ்வாய்க்கிழமை விதிக்கப்பட்டுள்ளது.

கணவனை இழந்த கைம்பெண் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு உதவும் நோக்கி பெட்ரோல் மற்றும் அதிவேக டீசலுக்கு லிட்டருக்கு 60 பைசா வீதம் செஸ் வரி விதிக்க ஹிமாசல் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 11 ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்த வரி விதிப்பானது அமலுக்கு வந்திருப்பதாக ஹிமாசல் மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஹிமாசல் பிரதேசம் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, ஹிமாசல் பிரதேச மதிப்பு கூட்டப்பட்ட வரித் திருத்த மசோதா 2026-ஐ அம்மாநில அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றியது.

இந்த திருத்தப்பட்ட சட்டமானது, அதிகபட்சம் ரூ. 5 வரை வரி விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குகிறது. இதனைப் பயன்படுத்தி கைம்பெண் மற்றும் ஆதரவற்றோர் நலனுக்கான செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது.

பாஜக மூத்த தலைவரும் ஹிமாசல் எதிர்க்கட்சித் தலைவருமான ஜெய்ராம் தாக்குர், காங்கிரஸ் அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆவர் தெரிவித்திருப்பதாவது:

“ஹிமாசல் பிரதேச அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் பெயரில் வரி விதித்து வருவாய் ஈட்டுவது முறையற்றது. இந்த வரி விதிப்பை மாநில அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஒருபுறம் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த பிரதமர் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மறுபுறம் ஹிமாசல் அரசு அந்த விலையை மேலும் உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.

Summary

Widows and Orphans cess announced on petrol and diesel in Himachal Pradesh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.