FOLLOW US

ON GOOGLE DISCOVER

வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிகளை கடுமையாக்கிய மத்திய அரசு!

ஜம்மு - காஷ்மீர், அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதிகபட்சமாக 6 சிம் கார்டுகளுக்கு மட்டுமே அனுமதி...

News image

கோப்புப் படம்

Updated On :19 ஆகஸ்ட் 2026, 5:43 pm IST

நாட்டில் தனிநபர் ஒருவர் தனது பெயரில் அல்லது ஒரு அடையாள ஆவணத்தின் கீழ் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதிகபட்சமாக 6 சிம் கார்டுகள் வைத்திருக்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

சைபர் மோசடி, டிஜிட்டல் கைது போன்றவற்றைத் தடுக்க சிம் கார்டுகள் வாங்குவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு கடுமையாக்கியுள்ளது.

இதன்படி, தனி நபர் ஒருவர் அதிகபட்சம் 9 சிம்கார்டுகளை வைத்திருக்கலாம் என்றும் ஜம்மு - காஷ்மீர் மற்றும் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்சம் 6 சிம் கார்டுகள் அனுமதிக்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

புதிய தொலைத்தொடர்பு விதிகளின்படி, சிம்கார்டுகளை வாங்குபவர்களின் விவரங்களை உடனடியாக நிறுவனங்கள் சரிபார்க்க வேண்டும்.

டிஜிட்டல் இண்டலிஜென்ஸ் பிளாட்பார்ம் வழியாக வாடிக்கையாளர்களை ஆய்வு செய்து தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனத் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனுமதியை மீறி சிம் பெறுவோருக்கு ரூ. 50,000 முதல் ரூ. 2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்றும் மோசடி வழக்குகளில் சிறை தண்டனையும் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஆதார் எண்ணில் எத்தனை சிம் கார்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை அறிய சஞ்சார் சாதி போர்ட்டல் (Sanchar Saathi Portal) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Only 9 SIM cards allowed per person! Central Government tightens rules

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.