அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

மேக்கேதாட்டு அணை தமிழக விவசாயிகளுக்குப் பயனளிக்கும்! - கர்நாடக முதல்வர் பேச்சு!

மேக்கேதாட்டு திட்டம் தமிழகம் மற்றும் புதுச்சேரி விவசாயிகளுக்குப் பயனளிக்கும் என கர்நாடக முதல்வர் பேச்சு...

DK Shivakumar in chennai

தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் விஜய்யுடன் கர்நாடக முதல்வர் சிவகுமார் - PTI

Published On :20 ஆகஸ்ட் 2026, 4:07 pm IST

மேக்கேதாட்டு திட்டம் தமிழகம் மற்றும் புதுச்சேரி விவசாயிகளுக்குப் பயனளிக்கும் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னையை அருகே கோவளத்தில் இன்று (ஆக. 20) நடைபெறும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில், தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் மற்றும் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

காவிரி நீர் பகிர்வு மற்றும் மேக்கேதாட்டு திட்டம் உள்ளிட்ட விவகாரங்களால், தமிழகம் மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. காவிரி ஆற்றின் மீது மேக்கேதாட்டுவில் அணையைக் கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்தத் திட்டத்தால், தமிழக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்ற கர்நாடக முதல்வர் சிவகுமார், மேக்கேதாட்டு திட்டம் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் விவசாயிகளுக்குப் பயனளிக்கும் எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் கூறியதாவது:

“காவிரி நீர் விவகாரத்தில் தீர்வுக்காண வேண்டுமென இந்தக் கூட்டத்திற்கு வரும்போது, மூத்த தலைவரும் ஆந்திரப் பிரதேச முதல்வருமான சந்திரபாபு நாயுடு என்னிடம் கூறினார். நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் மேக்கேதாட்டு திட்டத்தின் மூலம் கிடைக்கும் ஒவ்வொரு துளி நீரும் தமிழகம் மற்றும் புதுச்சேரி விவசாயிகளுக்குப் பயனளிக்கும். உங்களுக்கு உதவி செய்ய எங்களுக்கு உதவுங்கள்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, தமிழகத்துக்கான நீரைத் திறந்துவிடுவது குறித்து காவிரி நீர் மேலாண்மை வாரியம் பிறப்பித்த உத்தரவைக் கடைபிடிக்குமாறு கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Karnataka CM D.K. Shivakumar has stated that the Mekedatu project will benefit farmers in Tamil Nadu and Puducherry.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.