FOLLOW US

ON GOOGLE DISCOVER

பெங்களூர் அறிவியல் கல்வி மைய மாணவர் தற்கொலை! 15 நாள்களில் 2வது சம்பவம்எத்தனாலுக்கும் சர்க்கரை விலையேற்றத்துக்கும் தொடர்பில்லை: மத்திய அரசுவண்டலூர் வண்ணத்துப்பூச்சி பூங்கா மீண்டும் திறப்பு!குடும்பத்துடன் இறுதிநாள்கள்.. கொலைக் குற்றவாளிக்கு 105 வயதில் விடுதலை! சூட்கேஸில் சடலம்! குற்றவாளிகள் இருந்த வீட்டில் பிரியாணி டபராவில் மனித உடல்! தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்வார இறுதி விடுமுறை: 2,755 சிறப்பு பேருந்துகள் இயக்கம்ஆக. 25 முதல் இரவு நேர புறநகா் ரயில்கள் ரத்துபொறியியல் கலந்தாய்வு: 3-ஆம் சுற்றில் 68,640 மாணவா்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு அடுத்த 10 மாதங்களில் இந்திய வடிவமைப்பிலான கைப்பேசிகள்: அஸ்வினி வைஷ்ணவ்

பணி ஓய்வுக்குப் பின் எப்போது பிஎஃப் வட்டி நிறுத்தப்படும்? விளக்கம்

பணி ஓய்வுக்குப் பின் எப்போது பிஎஃப் வட்டி நிறுத்தப்படும் என்பது பற்றிய தகவல்

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி 8.10 சதவீதமாகக் குறைப்பு

Published On :22 ஆகஸ்ட் 2026, 3:20 pm IST

ஒருவர் பணி ஓய்வுக்குப் பிறகு அவரது பிஎஃப் தொகைக்கு வட்டி வழங்குவது எதுநாள்வரை நீடிக்கும் என்பது பற்றி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வாரியம் விளக்கம் கொடுத்துள்ளது.

அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பான விளக்கத்தை வெளியிட்டிருக்கிறது.

ஒரு தொழிலாளர் அல்லது ஊழியர் வேலையை விட்டு விலகும்போது அல்லது ஓய்வுபெறும்போது, அவரது வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கிற்கான வட்டி வருவாய் உடனடியாக நிறுத்தப்படுவதில்லை. அதாவது, வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருக்கும் தொகைக்கு வட்டி வரவு வைப்பது என்பது அந்த ஊழியரின் வயது மற்றும் அந்தக் கணக்கு செயலற்றதாக மாறும்போதுதான் நிகழ்கிறது.

அதாவது, ஓய்வுபெற்றுவிட்டோம் அல்லது பணியிலிருந்து விலகிவிட்டோம், இனி பிஎஃப் கணக்கில் பணத்தை எடுத்துவிடலாம் என்று கருதுவோருக்கு இது ஒரு புதிய தகவலாக அமைந்துள்ளது.

அண்மையில் ஊழியர் சேமநிதி அமைப்பு வெளியிட்ட விளக்கத்தில், 55 வயது அல்லது அதற்குப் பிறகு ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு, 58 வயதை அடைந்தபிறகே இபிஎஃப் கணக்கு செயலிழந்ததாகும். அதன்பிறகுதான், வட்டி ஈட்டுவது நிறுத்தப்படும். அதுபோல 55 வயதுக்கு முன்பு ஓய்வுபெற்றாலும், 58 வயதை வரை தொடர்ந்து வட்டி வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறது.

எனவே, 58 வயதுக்கு முன்பு, எப்போது பணியிலிருந்து விலகினால், வேலையளிப்பவரிடமிருந்து புதிய பங்களிப்புத் தொகைதான் கிடைக்காதே தவிர, கணக்கு செயல்பாட்டில் இருக்கும். அதில் இருக்கும் தொகைக்கு வட்டி வரவு வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Summary

When does PF interest stop accruing after retirement? explanation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.