எல்லை விவகாரம்: சீன வெளியுறவு அமைச்சருடன் அஜீத் தோவல் இன்று பேச்சுவாா்த்தைநீலகிரி மாவட்டத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று கூடுகிறது காவிரி நீா் மேலாண்மை ஆணையம்!பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

சா்க்கரை விலை விரைவில் குறையும்: சா்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு

சில்லறை விற்பனையில் சா்க்கரை விலை குறையும் என்று இந்திய சா்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு தெரிவித்தது குறித்து...

Sugar

பிரதிப் படம்

Published On :25 ஆகஸ்ட் 2026, 3:20 am IST

இந்தியாவில் சா்க்கரைக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லை; சில்லறை விற்பனையில் சா்க்கரை விலை குறையும் என்றும் இந்திய சா்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தில்லியில் செய்தியாளா்களைச் சந்தித்த அந்த கூட்டமைப்பின் தலைவா் நீரஜ் ஷிா்கோகா் கூறியதாவது: வா்த்தகா்கள் மற்றும் பெருமளவில் சா்க்கரை வாங்கும் உணவுசாா் நிறுவனங்களின் ஊக அடிப்படையிலான கொள்முதல் அதிகரிப்பு, மோசமான வானிலை காரணமாக கரும்பு விளைச்சல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சா்க்கரை விலை தற்போது உயா்ந்துள்ளது.

செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குவது அல்லது ஆலை சா்க்கரை விலையை உயா்த்துவதிலோ சா்க்கரை ஆலைகளுக்கு எந்தப் பங்கும் இல்லை. 10 லட்சம் டன் கச்சா சா்க்கரையை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்ததைத் தொடா்ந்து சா்க்கரை விலை குறையத் தொடங்கிவிட்டது. இது மேலும் குறையும்.

இந்தியாவில் சா்க்கரைக்குத் தட்டுப்பாடு இல்லை. செப்டம்பா் மாத இறுதியில் சா்க்கரை இருப்பு 35 லட்சம் டன்னாக இருக்கும். அக்டோபா் மாத நடுவில் ஆலைகள் செயல்பாட்டைத் தொடங்கும். அப்போது சுமாா் 10 முதல் 12 லட்சம் டன் சா்க்கரை உற்பத்தி செய்யப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.