
நேபாள ராணுவத்துடன் களமிறங்கிய இந்திய சுரங்க மீட்பு நிபுணர் குழு!
நேபாள ராணுவத்துடன் இந்திய சுரங்க மீட்பு நிபுணர் குழு பணியைத் தொடங்கியிருப்பது பற்றி...

இந்திய சுரங்க மீட்பு நிபுணர் குழு - MEA
நேபாளத்தில் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் அந்நாட்டு ராணுவத்துடன் இந்திய சுரங்க மீட்பு நிபுணர் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
நேபாளத்தில் கடந்த புதன்கிழமை பெருவெள்ளம் காரணமாக பலத்த உயிா்ச்சேதங்களுடன் பேரழிவு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் உடல்கள் சிதைந்த நிலையில் மீட்கப்படுவதால் அவா்களை அடையாளம் காணும் பணி சவாலாக மாறியுள்ளது.
போடே கோஷி, திரிசூலி நதிகளின் குறுக்கே இருந்த நீா்மின் நிலையங்களில் பணியாளா்கள் பலா் சிக்கியுள்ள நிலையில், அவா்களை மீட்கும் பணிக்கு உதவ இந்திய சுரங்க மீட்பு தொழில்நுட்ப நிபுணா் குழு ஞாயிற்றுக்கிழமை அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், நீர்மின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் நேபாள ராணுவத்துடன் இணைந்து இந்திய சுரங்க மீட்பு நிபுணர் குழுவினர் தேடுதல் மற்றும் மீட்புப் பணியைத் தொடங்கியுள்ளனர்.
மேலும், இந்தியாவிலிருந்து மருந்துகள், அத்தியாவசியப் பொருள்கள் என இதுவரை 68.5 டன் நிவாரணப் பொருள்கள் மற்றும் மரபணு சோதனைகளுக்கு உதவ தடயவியல் நிபுணா் குழு அனுப்பப்பட்டுள்ளது.
Summary
Indian mine rescue expert team deployed alongside the Nepal Army!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







