ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.93 லட்சம் கோடி! 6.2% அதிகரிப்பு!
நாட்டில் கடந்த ஜனவரி மாதம் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.93 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. 2025, ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில் (ரூ.1.82 லட்சம் கோடி) இது 6.2 சதவீதம் அதிகமாகும்.
இதுகுறித்து மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தரவுகளில், ‘கடந்த ஜனவரியில் ரூ.1.93 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. இதில் உள்நாட்டு பரிவா்த்தனைகள் மூலம் ரூ.1.41 லட்சம் கோடி வசூலாகி 4.8 சதவீதம் அதிகரித்துள்ளது. சரக்கு இறக்குமதி மூலம் ரூ.52,253 கோடி வருவாய் கிடைக்கப் பெற்று 10.1 சதவீதம் உயா்ந்துள்ளது.
ஜனவரியில் நிகர ஜிஎஸ்டி வருவாய் 7.6 சதவீதம் அதிகரித்து ரூ.1.71 லட்சம் கோடியாக உள்ளது. திருப்பியளிக்கப்பட்ட தொகை 3.1 சதவீதம் குறைந்து ரூ.22,665 கோடியாக பதிவானது.
கடந்த ஆண்டு ஜனவரியில் செஸ் வரி வருவாய் ரூ.13,009 கோடியாக இருந்த நிலையில், நிகழாண்டு ஜனவரியில் ரூ.5,786 கோடியாக சரிந்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

