விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

எப்ஸ்டீன் கோப்புகளில் மோடி பெயர்! நாடாளுமன்றத்தில் விவாதிக்க காங்கிரஸ் நோட்டீஸ்!

எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரத்தை விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ்...

News image
பிரதமர் மோடி- கோப்புப் படம்
Updated On :2 பிப்ரவரி 2026, 5:02 am

இணையதளச் செய்திப் பிரிவு

எப்ஸ்டீன் கோப்புகள் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரும் குறிப்பிடப்பட்டிருப்பது பற்றி மக்களவையில் விவாதிக்கக் கோரி காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளது.

அமெரிக்காவில் பெரும் பணக்காரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன், சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் சிக்கி, சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த நிலையில், தற்போது அவரின் குற்றச் செயல்கள் அடங்கிய சுமார் 30 லட்ச பக்கங்கள் கொண்ட ஆவணங்கள், புகைப்படங்கள், விடியோக்கள் அடங்கிய எப்ஸ்டீன் கோப்புகளை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ளது.

அதில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது இஸ்ரேல் பயணம் குறித்து சில மின்னஞ்சல் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மத்திய அரசு தரப்பில் இருந்து மறுப்பு செய்தி வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், மக்களவையில் எப்ஸ்டீன் கோப்புகளின் மோடியின் பெயர் இடம்பெற்றது தொடர்பாக விவாதிக்கக் கோரி, காங்கிரஸ் மக்களவை கொறடா மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார்.

அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

"ஜூலை 9, 2017 தேதியிட்ட, எப்ஸ்டீனால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் ஒரு மின்னஞ்சல், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க ஜனாதிபதி ஆகியோர் சம்பந்தப்பட்ட சந்திப்புகள் மற்றும் அதைத் தொடர்ந்த இஸ்ரேலுக்கான மோடியின் அதிகாரப்பூர்வ பயணம் பற்றிக் குறிப்பிடுகிறது. இது, தற்போது உலகளவில் பரவி, கடுமையான கேள்விகளையும் ஊகங்களையும் எழுப்புகின்றன. இதுபோன்ற பிரச்னைகள் சர்வதேச அளவில் விவாதிக்கப்படும்போது இந்த அவை மௌனமாக இருக்க முடியாது, மேலும் மத்திய அரசு ஒரு தெளிவான, திட்டவட்டமான மற்றும் அதிகாரப்பூர்வமான விளக்கத்தை அளிக்கவில்லை.

நாங்கள் பிரதமரிடமிருந்து பதில்களைக் கோருகிறோம். எப்ஸ்டீனால் குறிப்பிடப்பட்ட தகவல்களின் நம்பகத்தன்மையை மத்திய அரசு சரிபார்த்ததா? எப்ஸ்டீன், இந்திய அரசுடனோ அல்லது மோடியுடனோ எப்போதாவது தொடர்பு கொண்டாரா?” என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.