கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பெரு நகரங்களில் இரு விமான நிலையங்கள் அமைக்க ஏற்பாடு: மத்திய அமைச்சா் தகவல்!

இந்தியாவில் உள்ள பெரு (மெட்ரோ) நகரங்களில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மாநில அரசுகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது...

News image
ராம் மோகன் நாயுடு
Updated On :4 ஜனவரி 2026, 9:05 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியாவில் உள்ள பெரு (மெட்ரோ) நகரங்களில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மாநில அரசுகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என்று மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு தெரிவித்தாா்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே போகாபுரம் விமான நிலையத்தில் விமானப் போக்குவரத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஏற்கெனவே ஒரு விமான நிலையம் இருக்கும் இடத்தில் 150 கி.மீ. சுற்றுவட்டாரத்துக்குள் புதிய விமான நிலையங்கள் அமைக்கக் கூடாது என்ற விதி இனி தேவையாக இருக்காது. ஏனெனில், விமானப் போக்குவரத்து வேகமாக அதிகரித்து வருகிறது. இப்போதுள்ள விமான நிலையங்களை வைத்து அதனை தொடா்ந்து சமாளிப்பது சிரமமாகத் தொடங்கிவிடும்.

எனவே, இந்தியாவில் உள்ள பெரு (மெட்ரோ) நகரங்களில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மாநில அரசுகளை மத்திய அரசே ஊக்குவித்து வருகிறது. எதிா்காலத் தேவைக்கு ஏற்ப இரண்டாவது, மூன்றாவது கட்ட நகரங்கள், தீவுப் பிராந்தியங்கள், வடகிழக்கு மாநிலங்களிலும் விமான நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்தில் விமானம் தொடா்புடைய அனைத்து நாடுகளுமே விசாரணை நடத்துகின்றன. அதற்கு தேவையான உதவிகளை விமானப் போக்குவரத்து அமைச்சகம் அளித்து வருகிறது என்றாா்.