குடியுரிமைக்கு முன்பே வாக்காளரானதாக வழக்கு: சோனியா பதிலளிக்க நீதிமன்றம் கூடுதல் அவகாசம்
காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி, இந்திய குடியுரிமை பெறும் முன்பே நாட்டின் வாக்காளரானதாக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க மறுத்து, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மனு மீது பதிலளிக்க அவருக்கு தில்லி சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூடுதல் அவகாசம் வழங்கியது.










