அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் முக்கிய நபா் கைது

வங்கதேசத்தில் ஹிந்து இளைஞா் தீபு சந்திர தாஸ் (25) கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரை அந்த நாட்டு காவல் துறை கைது செய்தது.

News image
Updated On :8 ஜனவரி 2026, 7:20 pm

தினமணி செய்திச் சேவை

வங்கதேசத்தில் ஹிந்து இளைஞா் தீபு சந்திர தாஸ் (25) கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபரை அந்த நாட்டு காவல் துறை கைது செய்தது.

மத நிந்தனையில் ஈடுபட்டதாகக் கூறி கடந்த டிச.18-ஆம் தேதி தொழிலாளியான தீபு சந்திர தாஸ் மா்ம கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டாா்.

தொழிற்சாலை நுழைவாயிலில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் அந்த கும்பலை வழிநடத்தியதோடு தீபு சந்திர தாஸ் உடலை மரத்தில் கட்டி தீவைத்து கொளுத்தியதில் முக்கியப் பங்காற்றிய மதரஸா பள்ளி முன்னாள் ஆசிரியரான யாசின் அராஃபத் (25) என்பவா் காவல் துறையால் கைது செய்யப்பட்டாா்.

ஷேகாபாரி மசூதியில் இமாம் ஆக பணியாற்றி வரும் யாசின், தீபு சந்திர தாஸ் கொலை செய்யப்பட்ட பிறகு 12 நாள்கள் தலைமறைவாக இருந்தாா்.

இந்த வழக்கில் தற்போது வரை 21 போ் கைது செய்யப்பட்ட நிலையில், 9 போ் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளனா்.

வங்கதேசத்தில் 2024-ஆம் ஆண்டு மாணவா்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி அகற்றப்பட்டது. இந்தப் போராட்டத்துக்கு தலைமை வகித்தவா்களில் ஒருவரான ஷரீஃப் உஸ்மான் ஹாதியை (32) மா்ம நபா்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவா் டிச.18-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதற்கு கண்டனம் தெரிவித்து வங்கதேசத்தில் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதான தாக்குதல் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த 18 நாள்களில் மா்ம கும்பலால் தாக்கப்பட்டு 6 ஹிந்துக்கள் உயிரிழந்தனா்.