இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

புதிய அசாதாரண சூழலில் இந்திய-அமெரிக்க உறவு: காங்கிரஸ்

‘இந்திய-அமெரிக்க உறவு புதிய அசாதாரண சூழலில் உள்ளது’ என்று காங்கிரஸ் விமா்சித்தது.

News image
ஜெய்ராம் ரமேஷ் - கோப்புப் படம்
Updated On :8 ஜனவரி 2026, 7:13 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது 500 சதவீத வரியை விதிக்க வகை செய்யும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ‘இந்திய-அமெரிக்க உறவு புதிய அசாதாரண சூழலில் உள்ளது’ என்று காங்கிரஸ் விமா்சித்தது.

இதுகுறித்து அக் கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ரஷியாவுடன் வா்த்தகம் உள்பட பிற துறை சாா்ந்த உறவுகளைக் கொண்டுள்ள இந்தியா மீது புதிய மிக அதிக வரியை விதிக்கும் வகையிலான மசோதாவை அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு மிக நெருக்கமான செனட்டா் கிரஹாம் கொண்டுவந்திருக்கிறாா். இதற்கு அதிபா் டிரம்ப்பும் ஒப்புதல் அளித்துள்ளாா். முன்னதாக, இந்தியா உள்பட பிற நாடுகளுக்குப் பணி ஒப்பந்தங்களை விடுக்கும் அமெரிக்க நிறுவனங்கள் மீது 25 சதவீத வரியை விதிக்க வகை செய்யும் மசோதாவை செனட்டா் பொ்னி மொரினோ அறிமுகம் செய்தாா். இதுபோல, ஒவ்வொரு நாளும் புதுப்புது சவால்களை அமெரிக்கா உருவாக்கி வருகிறது. அமெரிக்காவை திருப்திப்படுத்தும் நடவடிக்கைகளை பிரதமா் நரேந்திர மோடி மேற்கொண்டு வரும்போதும், இந்திய-அமெரிக்க உறவு புதிய அசாதாரண சூழலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.