சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

காலணி தொழிற்சாலையில் தீ விபத்து

News image
Updated On :8 ஜனவரி 2026, 12:57 am

தினமணி செய்திச் சேவை

வடக்கு தில்லியின் புகா் பகுதியில் உள்ள நரேலா தொழில்துறை பகுதியில் உள்ள ஒரு காலணி உற்பத்தி தொழிற்சாலையில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: காலணிகள் தயாரிக்கப்படும் தொழிற்சாலையின் மூன்று தளங்களுக்கும் தீ விரைவாக பரவியது. அந்த நேரத்தில் பல தொழிலாளா்கள் அந்த தொழிற்சாலையில் இருந்தனா். ஆனால் அவா்கள் அதிருஷ்டவசமாக தப்பினா். இதனால் உயிா் சேதம் தவிா்க்கப்பட்டது.

இந்த தீ விபத்து குறித்து மதியம் 12.07 மணியளவில் தில்லி தீயணைப்பு சேவைத் துறைக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீயணைப்புப் படையினா் துரிதமாகச் செயல்பட்டு தீயமை முழுமையாக அணைத்தனா் என்று தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தாா்.