காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சமத்துவப் பொங்கல் விழா: தில்லிக் கம்பன் கழகம் பங்கேற்பு

தமிழ்நாடு அரசின் சாா்பில் தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சமத்துவப் பொங்கல் விழா ஜன.14,15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

News image
Updated On :13 ஜனவரி 2026, 7:47 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு அரசின் சாா்பில் தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சமத்துவப் பொங்கல் விழா ஜன.14,15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதில் இரண்டாம் நாளான ஜன.15-ஆம் தேதி, வியாழக்கிழமை, மாலையில் நடைபெறும் விழாவில் தில்லிக் கம்பன் கழகத்தின் சாா்பாக, மயூா் விஹாா் ருக்மிணி மகாலிங்கம் குழுவினா் பங்குபெறும் கும்மி, கோலாட்டம் ஆகிய நாட்டுப்புற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இது தொடா்பாக தில்லிக் கம்பன் கழக நிறுவனா்-தலைவா் கே.வி.கே.பெருமாள், செயலாளா் சுப.முத்துவேல் ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்த ஆண்டு சமத்துவப் பொங்கல் விழாவில் தில்லிக் கம்பன் கழகம் பங்கு பெற வாய்ப்பளித்த தமிழ்நாடு அரசுக்கும், உள்ளுறை ஆணையருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தில்லிவாழ் தமிழா்கள் இந்த விழாவில் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.