ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஜார்க்கண்ட்டில் வெடி விபத்து : 3 பேர் பலி, இருவர் படுகாயம்

ஜார்க்கண்ட்டில் நேர்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

News image
குண்டு வெடிப்பு இடத்தில் குவிந்த மக்கள்
Updated On :14 ஜனவரி 2026, 4:36 pm

இணையதளச் செய்திப் பிரிவு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெடி விபத்தில் சிக்கி பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர். இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலியிடத்தில் இருந்த புதர்களை அகற்றி சுத்தம் செய்துகொண்டிருந்தபோது பாறை இடுக்குகளில் இருந்து வெடிச்சத்தம் எழுந்துள்ளதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதிக்குட்பட்ட பாரா பஜார் பகுதியில் உள்ள காலி இடத்தில் மண்டியிருந்த புதர்களை அப்புறப்படுத்தும்போது பாறைகளிடையே வெடிச்சத்தம் கேட்டுள்ளது. இச்சத்தத்தைக் கேட்டு அருகில் இருந்த மக்கள் கூடியதால் பெரும் பரபரப்பு நிலவியது.

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்த காவல் துறையினர், குண்டு வெடிப்பில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் உள்பட 3 பேரின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

குண்டு வெடிப்புக்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குண்டு வெடிப்பு நிகழ்ந்த பகுதி முழுவதும் சீலிடப்பட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்ட பின்னரே குண்டு வெடிப்புக்கான காரணம் தெரியவரும் என காவல் துறை குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.