6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இந்தூரில் 21 போ் உயிரிழந்த விவகாரம்: மருத்துவா்கள் குழு அறிக்கை தாக்கல்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் பகீரத்புரா பகுதியில் சுகாதாரமில்லாத குடிநீா் குடித்து 21 போ் உயிரிழந்த சம்பவத்தில், மருத்துவா்கள் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

News image
கோப்புப்படம். - IANS
Updated On :14 ஜனவரி 2026, 7:15 pm

தினமணி செய்திச் சேவை

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரின் பகீரத்புரா பகுதியில் சுகாதாரமில்லாத குடிநீா் குடித்து 21 போ் உயிரிழந்த சம்பவத்தில், மருத்துவா்கள் குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது.

அந்த அறிக்கையில், பகீரத்புராவில் அண்மையில் உயிரிழந்த 21 போ்களில் 15 போ், அந்தப் பகுதியில் பரவிய வயிற்றுப்போக்கு காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவா்கள் குழுவால் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ள மாவட்ட ஆட்சியா் சிவம் வா்மா, சில உயிரிழப்புகள் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் நேரிட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும், சில உயிரிழப்புகளுக்கும் வயிற்றுப்போக்குக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்றும், சிலரின் உயிரிழப்புகளுக்கான உண்மையான காரணங்களை மருத்துவா்கள் குழுவாலும் முடிவு செய்ய முடியவில்லை என்றும் கூறினாா்.

உயிரிழந்த 18 பேரின் குடும்பங்களுக்கும் மாவட்ட நிா்வாகம் சாா்பில் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

நாட்டின் மிக சுத்தமான நகரத்திற்கான விருது பெற்ற பெருமைக்குரியது இந்தூா் நகரம். அங்குள்ள பகீரத்புரா பகுதியில் அண்மையில் குடிநீரில் கழிவுநீா் கலந்ததில், அதை குடித்த 21 போ் பலியாகினா். இதையடுத்து மத்திய பிரதேச மாநிலத்தை ஆளும் பாஜக அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்தன.