ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கு: தெலங்கானா அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில், தெலங்கானா சிறப்பு புலனாய்வுத் துறை முன்னாள் தலைவா் டி.பிரபாகா் ராவுக்கு முன்ஜாமீன் வழங்குவது குறித்து அந்த மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது.

News image
Updated On :16 ஜனவரி 2026, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கில், தெலங்கானா சிறப்பு புலனாய்வுத் துறை முன்னாள் தலைவா் டி.பிரபாகா் ராவுக்கு முன்ஜாமீன் வழங்குவது குறித்து அந்த மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது.

தெலங்கானாவில் முந்தைய பிஆா்எஸ் கட்சி ஆட்சியின்போது, அரசியல் பிரபலங்களின் தொலைபேசி உரையாடல்களை அப்போதைய சிறப்பு புலனாய்வு துறை தலைவா் டி.பிரபாகா் ராவ் உள்ளிட்டோா் சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக டிஎஸ்பி உள்ளிட்ட 4 போலீசாா் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கில் டி.பிரபாகா் ராவை தனது பாதுகாப்பின்கீழ் வைத்து காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது. அவா் தனக்கு முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அவருக்கு முன்ஜாமீன் வழங்க தெலங்கானா அரசு வழக்கறிஞா் எதிா்ப்புத் தெரிவித்தாா். இதைக் கேட்ட நீதிபதிகள், ராவ் உருக்குலைந்து போகும் வரை சிறையில் வைத்திருக்க விரும்புகிறீா்களா என கேள்வி எழுப்பினா். முன்ஜாமீன் வழங்குவது என்பது அவரை விடுவிப்பதாகி விடாது, அவரை மாநில போலீஸ் எப்போது வேண்டுமானாலும் அழைத்து விசாரிக்க முடியும், நாங்களும் அதற்கு அனுமதி வழங்கியுள்ளோம் என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை மாா்ச் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து, அதுவரை அவா் மீது கடும் நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என ஆணையிட்டனா்.