தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய் மதுரை மேலூர் அருகே கார் விபத்தில் 5 பேர் பலி, 3 பேர் காயம் நீர்வரத்து இல்லாததால் தஞ்சை மாவட்டத்தில் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா! தங்கம் விலை உயர்ந்தது! எவ்வளவு தெரியுமா? வெள்ளி விலை? (ஆக. 3) கபினியில் நீர்த் திறப்பு 27,000 கன அடியாக உயர்வு
/

இந்தியாவை விலக்கினால் அனைவருக்கும் பிரச்னை: அமெரிக்கா

இந்தியாவைப்போல பாகிஸ்தான் முதலீடு செய்வதில்லை என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பேச்சு

News image

இந்தியா - அமெரிக்கா - சித்திரிப்புப் படம்

Updated On :18 ஜனவரி 2026, 8:12 am IST

அமெரிக்காவில் இந்தியாவைப்போல பாகிஸ்தான் முதலீடு செய்வதில்லை என காங்கிரஸ் உறுப்பினர் ரிச் மெக்கார்மிக் கூறியுள்ளார்.

சர்வதேச ஆய்வுகள் மைய நிகழ்ச்சியில் அமெரிக்க குடியரசு கட்சி மற்றும் காங்கிரஸ் உறுப்பினருமான ரிச் மெக்கார்மிக் பேசுகையில், "பாகிஸ்தானில் 30 கோடி மக்கள்தொகை உள்ளன. ஆனால், அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் முதலீடுகளைக் கொண்டு வருவதில்லை. இந்தியாவில் முதலீடு செய்யப்படுவது மட்டுமின்றி, அமெரிக்காவுக்கும் இந்தியா முதலீடுகளைக் கொண்டு வருகிறது.

திறமை முக்கியமானது. இந்தியா மிகப்பெரிய அளவிலான திறமைகளை வழங்கி வருகிறது. திறமையான நபர்களையும் ஏற்றுமதி செய்து வருகிறது.

எனவே, இந்தியா போன்ற ஒரு நாட்டைத் தள்ளினால், அது அமெரிக்காவுக்குத்தான் பெரிய சிக்கலில் முடியும். இந்தியாவை நண்பர்களாக ஏற்றுக்கொண்டால், அமெரிக்காவுக்கு அமைதியும் செழிப்பும் கிடைக்கும். நாம் அவர்களை அந்நியப்படுத்தினால், அது நம் அனைவருக்கும் ஒரு பெரிய பிரச்னையாக இருக்கும்" என்று தெரிவித்தார்.

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை இழிபறியாகி வரும்நிலையில், இந்திய முதலீடு குறித்து மெக்கார்மிக் பேசியுள்ளார்.

Summary

India Brings Money To America, Not Pakistan: US Lawmaker Rich McCormick

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.