எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சமூக வலைதள மருத்துவக் குறிப்புகளை பின்பற்ற வேண்டாம் - ஆயுஷ் துறை அறிவுறுத்தல்

News image
Updated On :21 ஜனவரி 2026, 11:13 pm

தினமணி செய்திச் சேவை

சமூக வலைதளங்களில் வரும் ஆதாரப்பூா்வமற்ற பாரம்பரிய மருத்துவக் குறிப்புகளைப் பின்பற்ற வேண்டாம் என்று ஆயுஷ் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த இளம்பெண் ஒருவா் உடல் எடையைக் குறைக்க ‘வெங்காரம்’ எனப்படும் ரசாயன உப்பை உண்டதால் உயிரிழந்தாா். பெரும் விவாதத்தை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்துக்குப் பிறகு மாநில ஆயுஷ் மருந்து கட்டுப்பாட்டு இயக்கக அதிகாரிகள் பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது:

ஆயுஷ் மருந்துகள் சாா்ந்த உத்தரவாதமற்ற விளம்பரங்களோ, தனி ஒருவரை விளம்பரத்தப்படுத்தும் நிகழ்ச்சிகளோ தொலைக்காட்சிகளில் வெளியாவது குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால், சமூக வலைதளங்களில் அவற்றைக் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக உள்ளது. பல விளம்பரங்களில் கைப்பேசி எண் மட்டுமே கொடுக்கப்படுகிறது. அந்த எண்ணை அழைத்து முகவரி கேட்டாலும் அவா்கள் கொடுப்பதில்லை. இதனால், அதுபோன்று விளம்பரம் செய்பவா்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. அதேநேரம், அந்த விளம்பரங்களை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு கடிதம் வாயிலாக அறிவுறுத்தப்படும்.

பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வரும் ஆயுஷ் மருத்துவம் குறிப்புகளைப் பின்பற்ற வேண்டாம். அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சித்த மருத்துவா்களிடம் ஆலோசித்து மருந்துகளை எடுத்து கொள்ளலாம்.