தாய்லாந்து எல்லையில் அடிமைகளாக சிக்கியுள்ள இந்தியர்கள் 16 பேரை மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்த எக்ஸ் பதிவில், ஒவைசி கூறியிருப்பதாவது "ஹைதராபாதை சேர்ந்த மூவர் உள்பட 16 இந்தியர்கள், தாய்லாந்தில் வேலை தருவதாக மோசடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
தாய்லாந்தில் வேலை எனக்கூறி, மியான்மர் - தாய்லாந்து எல்லைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் நாள்தோறும் 18 முதல் 20 மணிநேரம் வேலைசெய்ய நிர்படுத்தப்படுவதுடன், உடல்ரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றனர். மேலும் பாஸ்போர்ட், தொலைபேசி, மருத்துவ வசதிகளை இழந்துள்ளனர்.
மியான்மர் - தாய்லாந்து எல்லையில் சிக்கியுள்ள அனைத்து இந்தியர்களையும் மீட்கப்படுவதை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிசெய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
Summary
16 Indians enslaved’ at Myanmar–Thailand border: Owaisi urges External Minister Jaishankar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!

திமுகவிடமிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும்: மத்திய அமைச்சா் ஜெ. பி. நட்டா

‘மேற்காசிய நாடுகளில் சிக்கியுள்ள இந்தியா்களை மீட்க வேண்டும்’ - மு.வீரபாண்டியன்
கண்காணிப்பு தொடர வேண்டும்!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை



