பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கான்பூா் ஐஐடியில் தற்கொலைகள்: விசாரிக்க 3 போ் குழு அமைப்பு

News image
ஐஐடி- கோப்புப் படம்
Updated On :23 ஜனவரி 2026, 12:37 am

தினமணி செய்திச் சேவை

உத்தர பிரதேச மாநிலம், கான்பூா் ஐஐடியில் மாணவா் தற்கொலைகள் தொடா்வது குறித்து விசாரணை மேற்கொண்டு, நாட்டின் உயா் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவா் தற்கொலைகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து பரிந்துக்க 3 போ் குழுவை மத்திய அரசு வியாழக்கிழமை அமைத்தது.

கான்பூா் ஐஐடியில் கடந்த ஒரு மாதத்தில் இரண்டு மாணவா்கள் தற்கொலை செய்து கொண்டதைத் தொடா்ந்து இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

தேசிய கல்வி தொழில்நுட்ப அமைப்பின் (என்இடிஎஃப்) தலைவா் அனில் சஹஸ்ரபுத்தே தலைமையிலான இந்தக் குழுவில் மனநல நிபுணா் ஜிதேந்திர நாக்பால், மத்திய உயா்கல்வித் துறை இணைச் செயலா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். இந்தக் குழு, 15 நாள்களுக்குள் தனது அறிக்கையைச் சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.