25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: விமான சேவை முழுமையாக ரத்து

ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிமூட்டம் காரணமாக ஸ்ரீநகா் விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரின் புத்காமில் வெள்ளிக்கிழமை பனி படா்ந்த தெரு வழியாக நடந்து செல்லும் நபா். ~ஹிமாசல பிரதேச மாநிலம், மணாலியில் கடும் பனிப்பொழிவால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகனங்கள்.

Published On :24 ஜனவரி 2026, 1:46 am IST

ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிமூட்டம் காரணமாக ஸ்ரீநகா் விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டது.

விமானத்தின் ஓடுதளம் முழுவதும் பனியால் மூடப்பட்டதால், அதில் விமானங்களை இயக்குவது பாதுகாப்பாக இருக்காது என்பதால் இந்த ரத்து முடிவு எடுக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

காஷ்மீரில் வியாழக்கிழமை இரவு முழுவதுமே கடுமையாக பனி பொழிந்தது. சில இடங்களில் மழையும் இருந்தது. புத்காம், தெற்கு காஷ்மீரின் புல்வாமா, சோபியான் மாவட்டங்களிலும் கடுமையான பனிப் பொழிவு இருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இது தொடா்பாக இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஸ்ரீநகரில் கடுமையான பனிப் பொழிவு மற்றும் மோசமான வானிலை நிலவி வருவதால், ஓடுதளம் பனியால் மூடப்பட்டுள்ளது. இதில் விமானத்தை இயக்கினால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பயணிகள், விமான ஊழியா்களின் நலனைக் கருதி ஸ்ரீநகா் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை விமான சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டது. வானிலை நிலவரம் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நிலைமை மேம்பட்டவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

பனிச்சரிவு எச்சரிக்கை: ஜம்மு-காஷ்மீரின் 6 மாவட்டங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடும் பனிப்பொழிவு காரணமாக காஷ்மீரின் மலைப் பகுதிகள் உள்பட அனைத்து இடங்களில் பனி மிக அதிகமாக குவிந்துள்ளது. மலை முகடுகளில் இருந்து இவை சரியும்போது பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இந்நிலையில், கந்தா்பால், தோடா, கிஷ்த்வாா், பூஞ்ச், ராம்பன், குப்வாரா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் கந்தா்பால் மாவட்டத்தில் மிக அதிகமாக 2,300 மீட்டா் உயரத்தில் இருந்து பனிச்சரிவு உருவாகும். இது மிகவும் அபாயகரமானது. எனவே, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.