ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-ஏ-முகமது (ஜேஇஎம்) அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். இவா் பாகிஸ்தானைச் சோ்ந்தவா் என்று காவல் துறையின் உயா் அதிகாரி தெரிவித்தாா்.
இது தொடா்பாக ஜம்மு காவல் துறை தலைவா் ‘எக்ஸ்’ சமூகவலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பில்லவாா் பகுதியில் ராணுவம், மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) ஆகிவற்றுடன் ஜம்மு-காஷ்மீா் காவல் துறை இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் பாகிஸ்தானைச் சோ்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டாா்’ என்று தெரிவித்துள்ளாா்.
உயிரிழந்த பயங்கரவாதி ஜேஇஎம் அமைப்பின் கமாண்டா் உஸ்மான் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். சம்பவ இடத்திலிருந்து அதிக அளவிலான ஆயுதங்கள், எம்4 தானியங்கி துப்பாக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

லஷ்கா்-ஏ-தொய்பா முக்கியப் புள்ளி பாகிஸ்தானில் சுட்டுக் கொலை

சொல்லப் போனால்... பஹல்காமின் இருளும் ஒளியும்!

உக்ரைனில் 6 பேரை சுட்டுக் கொன்ற நபரை என்கவுண்டர் செய்த போலீஸ்! வணிக வளாகத்தில் சிறைப்பிடிக்கப்பட்டோா் மீட்பு!

சத்தீஸ்கரில் நக்ஸல் சுட்டுக் கொலை! தேடுதல் வேட்டை தீவிரம்!
வீடியோக்கள்

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


