வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புகோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பனிப்பொழிவு: ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை தொடர்ந்து மூடல்

காஷ்மீரின் பல பகுதிகளில் நிகழும் பனிப்பொழிவு காரணமாக, ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மூடப்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2026, 7:44 am

இணையதளச் செய்திப் பிரிவு

காஷ்மீரின் பல பகுதிகளில் நிகழும் பனிப்பொழிவு காரணமாக, ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மூடப்பட்டுள்ளது.

சாலை மூடப்பட்டதால், 270 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன. இதுகுறித்து போக்குவரத்துப் பிரிவு மூத்த அதிகாரி கூறுகையில், பனி அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதால் நெடுஞ்சாலை இன்னும் மூடப்பட்டுள்ளது.

குல்ஹாம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள நெடுஞ்சாலையில் புதிய பனிப்பொழிவு தொடர்ந்து நடைபெற்று வருவதால், போக்குவரத்தைச் சீரமைக்க இன்னும் சிறிது காலம் எடுக்கலாம். இவ்வாறு குறிப்பிட்டார். அதேசமயம் ஸ்ரீநகர் நகரிலும் இன்று அதிகாலை வேளையில் லேசான பனிப்பொழிவு காணப்பட்டது.

இருப்பினும், ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்திற்கான விமானச் சேவைகள் இந்த மோசமான வானிலையால் பாதிக்கப்படவில்லை. ஏற்கெனவே மூன்று விமானங்கள் தரையிறங்கியுள்ள நிலையில், விமான நிலையச் செயல்பாடுகள் வழக்கம் போல் நடைபெற்று வருகின்றன என்று விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

summary

Hundreds of vehicles are stranded on the 270-kilometre highway since Friday when heavy snowfall forced closure of the road.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.