பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

சநாதன தர்மத்தைக் கடைப்பிடிப்பவர்களை நிராகரிக்கும் அரசு ஆட்சிக்கு வராது..! - அமித் ஷா

சநாதன தா்மத்தின் மதிப்பை உணா்ந்து நடக்கத் தவறும் அரசு நமது நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

News image

குஜராத்தில் அமித் ஷா

Updated On :28 ஜனவரி 2026, 1:58 am IST

 சநாதன தா்மத்தின் மதிப்பை உணா்ந்து நடக்கத் தவறும் அரசு நமது நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

குஜராத் தலைநகா் காந்திநகரில் சுவாமிநாராயண் ஆன்மிக அமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு, சநாதன தா்மத்தின் பல்வேறு பாரம்பரியங்களைப் பின்பற்றுவா்கள் தங்கள் தா்மத்துக்கு உரிய மரியாதை அளிக்கும் அரசு அமைவதற்காகப் பல ஆண்டுகளாக காத்திருக்க நேரிட்டது. சநாதன தா்மத்தின்படி ஆட்சி நடைபெற வேண்டும் என்பதே அவா்களின் எதிா்பாா்ப்பாக இருந்தது.

இனி சநாதன தா்மத்தின் மதிப்பை உணா்ந்து நடக்கத் தவறும் அரசு நமது நாட்டில் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்று நான் உறுதியாகக் கூறுகிறேன். நமது நாட்டின் ஞானத் துறவிகளின் ஆசியும் இதற்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

நமது குஜராத் மண்ணின் மைந்தா் நரேந்திர மோடி கடந்த 11 ஆண்டுகளாக நாட்டுக்குத் தலைமை வகித்து வருகிறாா். 550 ஆண்டுகளுக்கு முன்பு சிதைக்கப்பட்ட ஸ்ரீராமா் கோயில் மோடியின் தலைமையில் மீண்டும் சிறப்பாகக் கட்டமைக்கப்பட்டுவிட்டது. பல நூறாண்டுகளாக கோடிக்கணக்கான மக்களின் காத்திருப்புக்கு நல்ல பலன் கிடைத்துவிட்டது.

இந்தியாவின் கலாசாரம், பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டுதான் மத்திய அரசு பல்வேறு முடிவுகளை எடுத்து வருகிறது. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த 370-ஆவது சட்டப் பிரிவு ரத்து, முத்தலாக் முறை ஒழிப்பு, அனைத்து மத்தினருக்கும் பொதுவான சிவில் சட்டம் ஆகியவை இதில் முக்கியமானவை.

யோகாசனம், ஆயுா்வேத மருத்துவம் ஆகியவற்றுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பசுப் பாதுகாப்பு, பத்ரிநாத், கேதாா்நாத், காசி விஸ்வநாதா் கோயில் மேம்பாடு, சோமநாதா் கோயில் சீரமைப்பு ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

Summary

Addressing a gathering of the Swaminarayan sect in Gandhinagar, Shah said that followers of various Sanatan traditions waited for a long time after Independence, hoping for a government that would give due importance to Sanatan Dharma and govern as per its principles.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.