இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

மும்பை: புறநகர் ரயிலில் இருந்து விழுந்து 3 பயணிகள் காயம்

மும்பையின் சியோன் நிலையம் அருகே புறநகர் ரயிலில் இருந்து விழுந்து மூன்று பயணிகள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை புறநகர் ரயில்(கோப்புப்படம்) - ANI

Published On :

மும்பையின் சியோன் நிலையம் அருகே புறநகர் ரயிலில் இருந்து விழுந்து மூன்று பயணிகள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் மத்திய ரயில்வே நெட்வொர்க்கில் உள்ள சியோன் நிலையம் அருகே புறநகர் ரயிலில் இருந்து 3 பயணிகள் வெள்ளிக்கிழமை காலை விழுந்துள்ளனர். சியோன் மற்றும் மதுங்கா ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ரயில் சியோன் நிலையத்திலிருந்து புறப்பட்டபோது பயணிகளிடையே தகராறு ஏற்பட்டது. மூன்று பயணிகள் தண்டவாளத்தின் அருகே விழுந்து காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதற்கட்ட விசாரணையில், ரயில் பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. தாதர் ரயில்வே காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு குறிப்பிட்டார். இதனால் ரயில் நிலையத்தில் சிறிது பரபரப்பு நிலவியது.

Summary

Three passengers were injured after falling off a suburban train near Sion station on the Central Railway network in Mumbai, an official said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.