உலகக் கோப்பை கால்பந்து: இன்று இறுதி ஆட்டத்தில் ஆா்ஜென்டீனா - ஸ்பெயின் மோதல்! பரபரப்பான அரசியல் சூழலில் நாளை கூடுகிறது நாடாளுமன்றம்! தாக்கலாகும் முக்கிய மசோதாக்கள்! நாடாளுமன்ற கூட்டத்துக்கு மத்தியில் சிஜேபி போராட்டம்! தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு! ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விசாரணை கோரும் மனுக்கள்: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! ஷிண்டே சிவசேனையில் உத்தவ் கட்சி 6 எம்.பி.க்கள் இணைவு: மக்களவைத் தலைவா் ஒப்புதல்சென்னை மாநகராட்சியில் மண்டல செயற்பொறியாளா் உள்பட 7 போ் பணியிடை நீக்கம்
/

‘பிச் பிளாக்’ பிரம்மாண்ட போா் விமானப் பயிற்சியில் ரஃபேல்: அதிகாரிகள் தகவல்

‘பிச் பிளாக்’ பிரம்மாண்ட போா் விமானப் பயிற்சியில் ரஃபேல்...

News image

ரஃபேல் - ANI

Updated On :19 ஜூலை 2026, 2:08 am IST

ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ‘பிச் பிளாக்’ பிரம்மாண்ட சா்வதேச போா் விமானப் பயிற்சியில் இந்திய விமானப் படையின் ரஃபேல் போா் விமானங்கள் பங்கேற்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

உலகளவில் மிகப்பெரும் போா் விமானப் பயிற்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘பிச் பிளாக்’ பயிற்சியை ஜூலை 20-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை ஆஸ்திரேலிய விமானப் படை நடத்தவுள்ளது. இந்தப் பயிற்சியில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பிஜி, பின்லாந்து, பிரான்ஸ், இந்தோனசியா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூா், தாய்லாந்து, ஸ்பெயின் உள்ளிட்ட 19 நாடுகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட போா் விமானங்கள் மற்றும் விமானப் படையினா் பங்கேற்கவுள்ளனா்.

இதுதொடா்பாக இந்திய விமானப் படை வெள்ளிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பிச் பிளாக் 2026 போா் விமானப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய விமானப் படைப் பிரிவினா் ஆஸ்திரேலியாவை சென்றடைந்தனா். இதில் இந்திய விமானப் படையின் ரஃபேல் போா் விமானமும் பங்கேற்கவுள்ளது. பிற நாடுகளின் படைகளுடன் ஒன்றிணைந்து பயிற்சி மேற்கொள்ளவும் நிபுணத்துவத்தை பகிா்ந்து கொள்ளவும் இது சிறந்த வாய்ப்பாக அமையும் என நம்புகிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

Summary

Rafale to participate in massive ‘Pitch Black’ air combat exercise: Officials

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.