தர்மேந்திர பிரதான் ராஜிநாமா வரை நாடாளுமன்றம் முடங்கும்! கார்கே திட்டவட்டம்50 ஆண்டுகள்! எம்ஜிஆருக்குப் பிறகு திரையரங்குகளில் ஹீரோவாக முதல்வர் விஜய்!தீவிரமடையும் போராட்டம்! மெரீனா மூடல்; மக்களுக்கு தடை!நீட் தேர்வை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக தனியாகப் போராட்டம்! தொடரும் அமளி! நாடாளுமன்றம் 4-வது நாளாக முடங்கியது! நாடாளுமன்றத்தில் இந்தியா - பாஜக கூட்டணிகள் எதிரெதிரே போராட்டம்!தர்மேந்திர பிரதானை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: மாணவர் கோரிக்கை நியாயமனது! - ராகுல் காந்திவிஜய் மீண்டும் படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை! அமைச்சர் வினோத்நீட் வழக்குகளை உடனடியாக விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள்! பிரதமர் மோடிகிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

வெள்ள பாதிப்புகளைக் கண்டறிய அஸ்ஸாம் விரையும் மத்தியக்குழு: முதல்வர் தகவல்!

மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளைக் கண்டறிய மத்தியக்குழு செல்வது பற்றி..

News image

வெள்ள பாதிப்புகளை கண்டறிய மத்தியக்குழு வருகை

Updated On :23 ஜூலை 2026, 12:14 pm IST

அஸ்ஸாமில் நிலவும் வெள்ள நிலைமை குறித்த சேதத்தின் அளவை மதிப்பிட மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான குழு விரைவில் மாநிலத்திற்கு வருகை தரும் என்றும் அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்தார்.

அஸ்ஸாமில் இடைவிடாத பலத்த மழையால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில் மேலும் 10 போ் உயிரிழந்ததையடுத்து, இறப்பு எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது.

மழை-வெள்ளத்தால் சிவசாகா், விஸ்வநாத், சராய்தேவ், தேமாஜி, திப்ரூகா், கோலாகாட், ஜோா்ஹாட், காமரூப், கா்பி ஆங்லாங், நகோன், தின்சுகியா உள்ளிட்ட மாவட்டங்களில் 5.65 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, சிவசாகா் மாவட்டம் கடும் பாதிப்பை எதிா்கொண்டுள்ளது. இங்கு மட்டும் 3.6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்தித்துப் பேசினார்.

இதுதொடர்பாக வியாழனன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில்,

வெள்ள நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டறிந்தார். அஸ்ஸாமில் முன்னெப்போதும் இல்லாத வகையிலான வெள்ளச் சூழலைக் கருத்தில்கொண்டு, சேதத்தின் அளவை மதிப்பிடவும், வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதற்குத் தேவையான மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான குழு விரைவில் மாநிலத்திற்கு வருகை தரும் என்று அவர் தெரிவித்தார்.

ஆற்றின் மேல் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக திடீர் வெள்ளம் ஏற்பட்டதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Assam Chief Minister Himanta Biswa Sarma on Thursday said Union Home Minister Amit Shah has enquired about the flood situation in the state, and an inter-ministerial central team will soon visit to assess the extent of damage.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.