ஹைதராபாத்தில் ஜென் ஸீ இளைஞர்கள் நடத்திய பேரணியில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று கலந்துகொண்டார்.
ஜென் ஸீ தலைமுறையினர் நீட் தேர்வு குளறுபடிகள் தொடர்பாக நடத்திய போராட்டங்களை ரேவந்த் ரெட்டி பாராட்டினார்.
அந்நிகழ்வில் உரையாற்றிய ரேவந்த ரெட்டி, இளைஞர்களின் போராட்டத்தால் மத்திய அரசின் முடிவு மறுபரிசீலனை செய்யப்பட்டு, அமைச்சர் ராஜிநாமா செய்யப்பட்டதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற்று, நீட் தேர்வு சர்ச்சையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான குறைந்தபட்ச வயதை 25-ல் இருந்து 21- ஆக குறைக்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை நிறைவேற்ற, ஆகஸ்ட் முதல் வாரத்தில் தெலங்கானா சட்டப்பேரவை மற்றும் மேலவையில் சிறப்புக் கூட்டம் கூட்டவுள்ளதாக அவர் அறிவித்தார்.
இந்தத் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என்றும், இதற்கென சட்டத் திருத்தம் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 21 வயதுடையவர்கள் ஏற்கனவே ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளாகவும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களாகவும் இருக்கத் தகுதி பெற்றுள்ள நிலையில் ஏன் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும் ரேவந்த் ரெட்டி கேள்வி எழுப்பினார்.
மேலும் ஜெர்மனி, சிங்கப்பூர். இங்கிலாந்து போன்ற நாடுகளில் அதிகப்படியான இளைஞர்கள் அரசியலில் பங்கேற்பதையும் அவர் உதாரணமாகச் சுட்டிக்காட்டினார்.
இந்தத் தீர்மானம் மூலம் ஜென் ஸீ தலைமுறை சட்டம் இயற்றுவதிலும், நிர்வாகத்திலும் அதிகளவு குரல் கொடுக்க முடியும். காங்கிரஸ் இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி, திருத்தம் கொண்டுவர இந்தியா கூட்டணியின் ஆதரவைக் கோரும் என்றும் அவர் பேசினார்.
Summary
Minimum age for contesting elections should be reduced to 21 says Revanth Reddy
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தென்காசியில் திமுக ஜென் சி குழு, இளைஞா்கள் கலந்துரையாடல்

பேரனுக்காக பூரி சமைத்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

சொல்லப் போனால்... ஜென் ஸீக்களும் பூமர்களும்!

ஹிட்லரிடம் உத்வேகம் பெற்று திட்டத்திற்குப் பெயர்: ரேவந்த் ரெட்டி மீது எழும் விமர்சனங்கள்!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



