தர்மேந்திர பிரதான் ராஜிநாமா என்பது தொடக்கப்புள்ளி மட்டுமே என சோனம் வாங்சுக் திங்கள்கிழமை (ஜூலை 27) தெரிவித்துள்ளார்.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தில்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்தப் போராட்டக் களத்தில் உண்ணா விரதத்தில் ஈடுபட்டு வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை தில்லி காவல் துறையினர் வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று, அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து, தில்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், சோனம் வாங்சுக் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இருப்பினும், தனது உண்ணாவிரதத்தைக் கடைப்பிடித்த சோனம் வாங்சுக் 26 வது நாளில் அதனை முடித்துக் கொண்டார். இதையடுத்து, மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் கடந்த சனிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து, சிஜேபி தனது போராட்டத்தை திரும்பப் பெற்றது.
இந்த நிலையில், மருத்துவமனையிலிருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சோனம் வாங்சுக் மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் சோனம் வாங்சுக் பேசியதாவது:
இந்த ராஜிநாமா அர்த்தமுள்ளதாக மாறும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். அப்படி மாறவில்லையென்றால், இந்த ராஜிநாமா முக்கியத்துவமற்றதாக அமையும். இது தொடக்கப்புள்ளி மட்டுமே. நமது நாட்டின் உண்மையான பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டும். இதனால் நாடு மேலும் மேம்படும்.
இதற்கான செயல்முறை ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக நான் நம்புகிறேன். இதுதொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பேச்சுவார்த்தை மற்றும் பரஸ்பர மரியாதையால் இந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டால் மிகவும் சிறப்பானதாக அமையும் என்று சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.
Summary
Sonam Wangchuk stated on Monday (July 27) that Dharmendra Pradhan's resignation is merely the starting point.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சோனம் வாங்சுக் டிஸ்சார்ஜ்! முதலில் எங்கு செல்கிறார் தெரியுமா?

மேதாந்தாவுக்கு மாற்றப்படுவதற்கு முன் சஃப்தா்ஜங் மருத்துவமனையில் துன்புறுத்தல்: வாங்சுக் புகாா்

நீட் வினாத்தாள் கசிவு: உண்ணாவிரதம் உள்ள சோனம் வாங்சுக் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு!

6 வது நாளாக உண்ணாவிரதம்! சோனம் வாங்சுகின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு!
விடியோக்கள்

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay



