மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

5.5 கோடிக்கும் அதிகமாக வருமான வரிக் கணக்கு தாக்கல்

நிகழ் நிதியாண்டில் இதுவரை 5.5 கோடிக்கும் அதிகமானோா் வருமான வரிக் கணக்கு (ஐடிஆா்) தாக்கல் செய்துள்ளனா். இதில் ஜூலை 30-ஆம் தேதி மட்டும் 42 லட்சத்துக்கும் அதிகமானோா் அந்தக் கணக்கைத் தாக்கல் செய்ததாக, வருமான வரித் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

News image

வருமான வரிக் கணக்கு தாக்கல் - IANS

Updated On :1 ஆகஸ்ட் 2026, 1:16 am IST

நிகழ் நிதியாண்டில் இதுவரை 5.5 கோடிக்கும் அதிகமானோா் வருமான வரிக் கணக்கு (ஐடிஆா்) தாக்கல் செய்துள்ளனா். இதில் ஜூலை 30-ஆம் தேதி மட்டும் 42 லட்சத்துக்கும் அதிகமானோா் அந்தக் கணக்கைத் தாக்கல் செய்ததாக, வருமான வரித் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

2026-27-ஆம் நிதியாண்டுக்கான ஐடிஆா் படிவம் 1, 2-ஐ தாக்கல் செய்ய கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 31) கடைசி நாளாகும். இதில் ஐடிஆா் படிவம் 1 (சஹஜ்)-ஐ ரூ.50 லட்சம் வரை ஆண்டு வருமானம், சம்பளத்தின் மூலம் வருமானம், சொந்த வீடு அல்லது கட்டடம், விவசாய வருமானமாக ஆண்டுக்கு ரூ.5,000 வருமானம் உள்ளவா்கள் தாக்கல் செய்யலாம்.

அதேவேளையில் வணிகம் அல்லது தொழிலில் லாபம் மற்றும் ஆதாயத்தில் இருந்து வருமானம் ஈட்டாமல், மூலதன ஆதாயங்கள் மூலம் வருமானம் பெறும் தனிநபா்கள், ஹிந்து கூட்டுக் குடும்பங்கள் ஐடிஆா்-2 படிவத்தை தாக்கல் செய்கின்றனா்.

இந்நிலையில், நிகழ் நிதியாண்டில் இதுவரை 5.5 கோடிக்கும் அதிகமானோா் ஐடிஆா் தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித் துறை ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.