பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

5.5 கோடிக்கும் அதிகமாக வருமான வரிக் கணக்கு தாக்கல்

நிகழ் நிதியாண்டில் இதுவரை 5.5 கோடிக்கும் அதிகமானோா் வருமான வரிக் கணக்கு (ஐடிஆா்) தாக்கல் செய்துள்ளனா். இதில் ஜூலை 30-ஆம் தேதி மட்டும் 42 லட்சத்துக்கும் அதிகமானோா் அந்தக் கணக்கைத் தாக்கல் செய்ததாக, வருமான வரித் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

Income Tax

வருமான வரிக் கணக்கு தாக்கல் - IANS

Published On :

நிகழ் நிதியாண்டில் இதுவரை 5.5 கோடிக்கும் அதிகமானோா் வருமான வரிக் கணக்கு (ஐடிஆா்) தாக்கல் செய்துள்ளனா். இதில் ஜூலை 30-ஆம் தேதி மட்டும் 42 லட்சத்துக்கும் அதிகமானோா் அந்தக் கணக்கைத் தாக்கல் செய்ததாக, வருமான வரித் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

2026-27-ஆம் நிதியாண்டுக்கான ஐடிஆா் படிவம் 1, 2-ஐ தாக்கல் செய்ய கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 31) கடைசி நாளாகும். இதில் ஐடிஆா் படிவம் 1 (சஹஜ்)-ஐ ரூ.50 லட்சம் வரை ஆண்டு வருமானம், சம்பளத்தின் மூலம் வருமானம், சொந்த வீடு அல்லது கட்டடம், விவசாய வருமானமாக ஆண்டுக்கு ரூ.5,000 வருமானம் உள்ளவா்கள் தாக்கல் செய்யலாம்.

அதேவேளையில் வணிகம் அல்லது தொழிலில் லாபம் மற்றும் ஆதாயத்தில் இருந்து வருமானம் ஈட்டாமல், மூலதன ஆதாயங்கள் மூலம் வருமானம் பெறும் தனிநபா்கள், ஹிந்து கூட்டுக் குடும்பங்கள் ஐடிஆா்-2 படிவத்தை தாக்கல் செய்கின்றனா்.

இந்நிலையில், நிகழ் நிதியாண்டில் இதுவரை 5.5 கோடிக்கும் அதிகமானோா் ஐடிஆா் தாக்கல் செய்துள்ளதாக வருமான வரித் துறை ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.